துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்)ஆசிரியர் : இமாம் ஷவ்கானிமரணம் : ஹிஜ்ரி 1250விரிவுரை : அஷ்ஷேய்க் முஜாஹித் இப்னு ரஸீன்தொகுப்பு : எம்.கெ. யாஸிர்தொடர் : 02
துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்)
ஆசிரியர் : இமாம் ஷவ்கானி
மரணம் : ஹிஜ்ரி 1250
விரிவுரை : அஷ்ஷேய்க் முஜாஹித் இப்னு ரஸீன்
தொகுப்பு : எம்.கெ. யாஸிர்
தொடர் : 02
வுழூ
1. வுழூ பருவமடைந்த ஒவ்வொருவருக்கும் கடமை தொழுவதாக இருந்தால்..
2. வுழூ செய்வதற்கு முன்னால் பிஸ்மில்லாஹ் சொல்வது சுன்னா
வுழூவின் ஒழுங்குகள்
1. வாய் கொப்பளித்தல்
2. நாசிக்கு நீர் செலுத்துதல் அதை சிந்துதல்
3. முழு முகத்தையும் கழுவுதல்
4. இரண்டு கைகளையும் முழங்கை வரை கழுவ வேண்டும்
5. தலையை மஸ்கு செய்ய வேண்டும் அதே தண்ணீரால் இரண்டு காதுகளையும் கழுவ வேண்டும்.
தலைப்பாகையோ, தொப்பியோ, முக்காடோ போட்டிருந்தால் தலையில் சிறிதளவு மஸ்கு செய்து அதன் மேல் முழுமையாக செய்ய வேண்டும்.
6. கரண்டைக் கால் அளவு இரண்டு கால்களையும் கழுவ வேண்டும். சப்பாத்து அணிந்து இருந்தால் சப்பாத்தின் மேல் மஸ்கு செய்யலாம்.
7. வுழூவுக்குறிய நிய்யத் இருந்தாலே தவிர அது மார்க்கம் சொல்லக்கூடிய வுழூவாக மாறும்.
8. தலை அல்லாத மற்ற பகுதிகளை மூன்று முறை செய்வது சிறந்தது. தலையை ஒரு முறைதான் மஸ்கு செய்ய வேண்டும்.
9. வுழூ எடுக்கும் போது பல் துலக்குவதை முற்படுத்துதல் சிறந்தது.
10. வுழூ எடுப்பதற்கு முன்னர் மணிக்கட்டு வரை இரண்டு கைகளையும் மூன்று முறை கழுவிக் கொள்ளுதல் சுன்னா
வுழூவை முறிக்கும் காரியங்கள்
1. மனிதனுடைய மலசலப் பாதையுனூடாக எந்தவொன்று வெளியாகினாலும்
2. எதன் காரணமாக குளிப்பு கடமையாகுமோ அதன் காரணமாகவும் வுழூ முறியும்
3. ஒட்டக இறைச்சி சாப்பிடுதல்
4. ஆழ்ந்து தூங்குதல்
5. வாந்தி எடுத்தல் இது போன்றவைகள் (இதற்கு ஆதாரம் இல்லை)
6. இச்சையோடு அந்தரங்க உறுப்புக்களை தொடுதல்
குளிப்பு
குளிப்பு கடமையாகும் காரியங்கள்
1. மனிதனுக்கு ஆசையின் காரணமாக மனி வெளிப்படுதல். இது சிந்திப்பதன் மூலம் இந்திரியம் வெளிப்படுவதையும் குறிக்கும்.
2. ஆண் பெண் உறுப்பு சந்திதுக் கொள்ளுதல்
3. மாதாவிடாய் இரத்தம் நின்றவுடன்
4. பிரசவத்தின் காரணமாக வெளிப்படும் இரத்தம் நின்றவுடன்
5. தூக்கத்தில் ஸ்கலிதம் ஆகிவிட்டதாக தனது ஆடையில் ஈரத்தை காணுதல்
6. மரணமாதல் (அவர் சார்பாக பிறருக்கு கடமை)
7. இஸ்லாத்திற்கு நுழைதல் (கருத்து முரண்பாடு உண்டு)
கடமையான குளிப்பின் குறைந்த பட்ச நிபந்தனைகள்
1. முழு உடலிலும் தண்ணீர் படும் வகையில் தண்ணீரை ஊற்றல்
2. முழு உடலும் நனைகின்ற வகையில் தண்ணீரில் மூழ்குதல்
3. கடமையான குளிப்பிற்குறிய நிய்யத் இருந்தால் மாத்திரம்தான் அது மார்க்கம் சொல்லக்கூடிய குளிப்பாக மாறும்.
4. வுழூவுடைய உறுப்புக்களை முற்படுத்துவதும் வலதால் செய்வதும் விரும்பத்தக்கது.
5. பெண்கள் கட்டுமுடியை அவிழ்க்க வேண்டிய அவசியமில்லை
• ஜும்ஆ குளிப்பு சுன்னத்தாகும், இரு பெருநாள் குளிப்பும் சுன்னத்தாகும் (ஜும்ஆ குளிப்பு ஆதார அடிப்படையில் இரு பாலாருக்கும் வாஜிப், இரு பெருநாள் குளிப்புகள் சுன்னா என்பதை பொருத்த வரை அனைத்து ஆதாரங்களும் பலவீனமானவைகள்)
• ஜனாசாவை குளிப்பாட்டுகின்றவர் குளிப்பது சிறந்தது
• இஹ்ராமிற்காக குளிப்பது சிறந்தது
• மக்காவில் நுழைவதற்காக குளிப்பது சிறந்தது
தயம்மம்
தயம்மம் செய்தால் வுழூ, குளிப்பு மூலமாக எதுவெல்லாம் கூடுமோ அதுவெல்லாம் கூடும்.
தயம்மத்தின் நிபந்தனைகள்
***************************************
• தண்ணீர் கிடைக்காமல் இருத்தல்
• நியாயமான காரணங்களுக்காக தண்ணீரை உபயோகிக்க முடியாமல் இருத்தல்
தயம்மத்தின் ஒழுங்குகள்
• தயம்மத்தின் உறுப்புக்கள் முகம் மற்றும் மணிக்கட்டு வரை இரண்டு கைகளுமாகும்.
• ஒரு தடவைதான் மஸ்கு செய்ய வேண்டும்.
• நிய்யத்துடன் பிஸ்மில்லாஹ் சொல்லி ஆரம்பிக்க வேண்டும். (பிஸ்மில்லாஹ் சொல்வது வாஜிப் அல்ல)
• கைகளால் ஒரு முறைதான் மண்ணை தடவ வேண்டும்.
• கை, முகம் என்பதில் எதை முதலில் செய்தாலும் மார்க்க ரீதியாக பிழை கிடையாது.
வுழூவை முறிக்கும் காரியங்கள் அனைத்தும் தயம்மத்தையும் முறிக்கும்.

No comments:
Post a Comment