ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் கிட்டத்தட்ட இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சி இருக்கின்றன. கடந்த கால ஜனாதிபதித் தேர்தல்களை போன்றல்லாமல் இம்முறை முஸ்லிம்களுக்கு மிகவுமே சவால் மிக்க ஒரு தேர்தலாகவே நோக்கப்படுகிறது. ஏனென்றால் முஸ்லிம்களின் கடந்த கால காயங்கள் இன்னும் ஆராவில்லை. ஆரும் படியாகவும் இருக்கவில்லை. எனவே இத்தேர்தல் முஸ்லிம்களை பொறுத்த வரையில் தமது கைக்கு வந்த கடிவாளம் போன்று ஒருகை பார்க்க இருக்கிறார்கள் என்பதையே உணர்த்தி நிற்கிறது. இதனை வெறுமனே உதாசீனப் படுத்தி விட்டு கடிவாளம் கைமாறிப் போன பின் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணி பயன் இல்லை.
23 Dec 2014
19 Dec 2014
அரசியல் சதுரங்கத்தில் முஸ்லிம்களின் சாமர்த்தியத்தின் அவசியம்
அரசியல் சதுரங்கத்தில் பொறி பறக்கும் நகர்வுகள் நாளுக்கு நாள் முட்டி அலை மோதும் இவ்வேளையில், முஸ்லிம்களாகிய நமது நகர்வுகள், நமது முஸ்தீபுகள் எவ்வாறு அமைய வேண்டும்? எமது பொறுப்புக்கள் எவ்வித்தில் எதிர்வினை காட்ட வேண்டும்? ”காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” எனும் பழமொழிக்கு ஒப்ப எதிர்வரும் ஜானதிபதித் தேர்தலை எவ்விதத்தில் பயன்படுத்திக் கொள்வது? எத்தகைய முடிவை எடுப்பது? போன்ற வினாக்களின் விடைகளின் தொகுப்பாக இக்கட்டுரை உங்களின் சிந்தனக்கு தீனி போடும் இன்ஷா அல்லாஹ்.
Labels:
சமூகம்
No comments:
9 May 2014
இனவாத வலையும் சிந்திக்க வேண்டிய இலங்கை முஸ்லிம்களும்.
இனவாதம், மதவாதம் போன்ற சொற்கள் இலங்கைக்கு முற்றுப்பெறாத தொடர் கதையாகத்தான் தொடர்கின்றன. பல ஆண்டு இனவாத யுத்தம் முடிவுக்கு வந்த பிறகு சமாதானப் பூங்காவாக திகழவேண்டிய இலங்கை பூமி மீண்டுமொருமுறை பழைய நிகழ்வுகளை மீட்டிப்பார்க்க வேண்டிய ஒரு சந்தர்ப்பம் ஏற்படுமோ என்ற யதார்தமான கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது. அப்படி எழுவதற்கான ஆறம்ப இனவாத தாக்குதல்கள் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றமையை ஊடகங்கள் வாயிலாக பார்த்தும் கேட்டும் வருகிறோம். இனவாத காவிகள் அவர்களுடைய இனத்துவேச காய்களை மிக சாதூர்யமாக நகர்தி வருகின்றனர். நகர்வுகள் நாளுக்கு நாள் தீவரப்போக்கை அடைவதையும் கண்டு வருகிறோம்.
Labels:
சமூகம்
No comments:
18 Apr 2014
நல்லிணக்கம் எனும் போர்வையில் நசுக்கப்படும் சமுதாயம்.
இலங்கையின் இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் ”நல்லிணக்கம்” என்ற சொற்பதம் பரவலாக எம் சமூகத்திற்கு மத்தியில் பேசுபொருளாக மாறி இருக்கின்றது. அதேபோல் சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுப்பு, தாராளத்தன்மை போன்ற சொற்பதங்களும் ”நல்லிணக்கத்திற்கு” இணக்கமாக கையாளப்படுகின்றது. முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் முற்றி முறுக்கேரி பற்றி எறிகின்ற இச்சூழ்நிலையில் இவ்வாறான சொற்பிரயோகங்களினால் அவற்றை அனைப்பதற்கு முயற்சிக்கும் நகர்வுகளாகவே தெரிகிறது. என்றாலும் இனவாத இரும்புக் கரம் இம்மியளவும் அடங்குவதாகத் தெரியவில்லை. இவ்வாறான சொற்பிரயோகங்கள் அவர்களுக்கு அடிபணிகின்ற அல்லது அச்சத்தின் வெளிப்பாடாகவே நோக்கப்படுகிறது, என்றால் அவர்களின் உத்வோகமே இதற்கு சான்று.
Labels:
சமூகம்,
விமர்சனம்
No comments:
13 Mar 2014
இஸ்லாத்தில் இணங்களுக்கு இடையிலான நல்லிணக்கம்
நம் இலங்கைத் திருநாட்டில் கறை படிந்த வரலாறாக இரு இனங்களுக்கு இடையில் நடைபெற்ற 30 வருட கால இமாலய யுத்தம், முற்றுப்பெற்று 5 வருடங்கள் பூர்த்தியாகி விட்டன. அதன் சுதந்திரக் காற்றை மக்கள் சுவாசித்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே, யுத்த ரகணங்கள் ஆறுவதற்கு முன்னமே, மீளவும் இன்னொரு சிறுபான்மை இனத்தை நோக்கிய சமிஞ்சைகள் ஒளிர்விட ஆறம்பித்திருக்கின்றன. 30 வருட கால யுத்தத்தின் பிறதான ஆறம்ப கர்த்தா, பெருபான்மை என்ற ஒரே காரணத்திற்காக சிறுபான்மைக்கு எதிராக சட்டத்தை கையில் எடுத்து அடக்குமுறைக்கு உள்ளாக்கியதே வரலாறு சொல்லும் சாட்சியாகும். அதே அணுகுமுறை இன்று சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராகவும் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கின்றது. இதன் பிண்ணனியில் செயற்படும் அரக்கர்களின் பிரதான நோக்கம், வரலாற்றில் தமிழினம் ஆயுதம் தூக்கியது போல் முஸ்லிம்களும் ஆயுதம் துக்க வேண்டும். ஆயுதத்தைக் கொண்டு நமக்கு எதிராக களம் காணுவார்களாயின், இதன் எதிரெலியாகவே அரச துணை கொண்டு அவர்களை ஒடுக்கி விடலாம் என்பதுவே அவர்களின் தாரகமந்திரம். இதனைத்தான் கடந்தகால யுத்தம் படம்பிடித்துக் காட்டுகின்றது.
Labels:
கட்டுரைகள்,
சமூகம்
No comments: