29 Mar 2015

சஹாபாப் பெண்களின் சமூகப் பங்களிப்புகள்..

சஹாபாப் பெண்களின் சமூகப் பங்களிப்பின் கருத்தாளங்களை கட்டுரைப்படுத்த முன் முதலில் சமூகம் என்றால் என்ன? சமூக கட்டமைப்பில் உள்வாங்கப் படுபவர்கள் யார்? என்ற புரிதலுக்கான கேள்விகளுக்கு விடை தொடுக்க முனைகிறேன். தமிழ் அகராதியின் பிரகாரம் ஒரு குறிப்பிட்ட தொழில், துறை, இனம் முதலியனவற்றைச் சேர்ந்தவர்களின் தொகுதியை சமூகம் என வரையரைப்படுத்தலாம். மேற்குறிப்பிட்டவற்றைச் சார்ந்தவர்கள் அச்சமூக கட்டமைப்பில் உள்ளடங்குபவர்கள். ஏன் இதை தலைப்பிற்கு அப்பால் நின்று மிகவும் அழுத்தி விளங்கப்படுத்துகிறேன்? என்றால், சஹாபாப் பெண்களை பொருத்தமட்டில் எச்சமூகத்தை பிரதிபலித்து தமது பங்களிப்பை மேற்கொண்டார்கள்? என்ற வினாவிற்கு விடை காணல் வேண்டும். அதாவது அவர்களை சார்ந்து இருந்த கொள்கையான இஸ்லாமியச் சமூகம் என்பதை தெளிவுபடுத்திக் கொள்வதற்காக வேண்டிதான். மனித நேயம் கொண்டவர்கள் ஒட்டுமொத்த மனித சமூகத்தை பிரதிபலித்துத்தானே தமது பங்களிப்பை செய்திருக்க வேண்டும்.? ஏன் இஸ்லாமிய சமூகத்தை மட்டும் குறிவைத்து தமது பங்களிப்பை சுருக்கிக் கொண்டார்கள்? போன்ற கேள்விகள் எழுவதிலும் தவிர்க்க முடியாது. 

பணம் படுத்தும் பாடும்… இஸ்லாத்தின் இலகு வழியும்


"பணத்தை கண்டால் பிணமும் வாய் திறக்கும்" என்பது முதுமொழி. அதை சற்றே குறைவின்றி பிரதிபலிக்கும் விதமாக, பணம் இன்றைய மனிதனை அடிமைப் படுத்திருக்கின்றது. இன்று பணம் ஒருமனிதனிடத்தில் இல்லை என்றால் அவன் உலகத்தில் வாழ்வதில் அர்த்தமேயில்லை என்றளவிற்கு, பணம் உயிருக்கு நிகராக நோக்கப்படும் அவலம் மனிதனை பீடித்திருக்கிறது. ஏனென்றால் பணம் இன்று மனிதனுடைய அனைத்து அம்சங்களிலும் ஊடுறுவி செல்வாக்குச் செலுத்துகின்றது என்பதை மறுக்க முடியாது.

எனவேதான் மனிதன் பணத்துக்காக நாயாய், பேயாய் அலைகின்றான். அதை அடைந்து கொள்வதற்கு இரவு பகல், மழை வெயில் என்று பாராமல் தனது வாழ்க்கையே அரப்பணிக்கின்றான். மானம், மரியாதை, குடும்பம், குழந்தை, சொந்தம், பந்தம், வீடு, நாடு என்று அனைத்தையும் பணத்துக்காக  வேண்டி துச்சமாக துறக்கின்றான். பொய், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கடத்தல், கலப்படம் என்று பஞ்ஞமா பாதகங்களையும் பணத்திற்காக பயமின்றி செய்யத் துணிகின்றான். இத்தனைக்கும் தனக்கு பணம் கிடைத்தால் போதுமென்ற தப்பெண்ணம்தான் அடிப்படைக் காரணம். மட்டுமல்லாமல் கர்வம், பெருமை, மற்றவர்களை மட்டம் தட்டல், தற்பெருமை பாரட்டல், கஞ்ஞத்தனம் போன்ற கூடாத துர் குணங்களாளும் பணம் மனிதனை ஆட்டிப்படைத்து விழுங்கிவிட்டிருக்கின்றது. பணம் அளவு கடந்து இருப்பவர்கள், பணம் அளவோடு இருப்பவர்கள், பணத்திற்காக திண்டாடுபவர்கள் என்று அனைத்துத் தரப்பினர்களும் பெரும்பாலும் பணத்தின் காரணமாகத்தான் தனது மானிடப் பண்புகளையெல்லாம் மறந்து மிருகங்களை விட கேவலமானவர்களாக மாறிவிடுகின்றனர்.  

முரண்பாடும் உடன்பாடும்


[முரண்பாட்டின் தோற்றம்]
இந்த நூற்றாண்டு மட்டுமல்ல வரலாறு நெடுகிலும் முரண்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகத்தான் நோக்கப்படுகிறது. மனிதனுக்கே உரிய சில பலவீனங்கள், துர் பண்புகள் முரண்பாட்டை தோற்றுவிக்கின்றன. பலவீனங்கள், துர் பண்புகள் நபருக்கு நபர் வேறுபடும் பொழுது சுயமாகவே முரண்பாடு தோற்றம்பெறுகிறது. மனித பலவீனம், துர் பண்பு என்ற அஸ்திவாரத்தில்தான் முரண்பாடு என்ற கட்டிடம் கட்டியமைக்கப்படுகிறது.