14 Sept 2021

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்) தொடர் 10

 

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்)

〽〽〽〽〽〽〽〽〽〽〽〽〽〽〽〽〽


ஆசிரியர் : இமாம் ஷவ்கானி 

மரணம் : ஹிஜ்ரி 1250 

விரிவுரை : அஷ்ஷேய்க் முஜாஹித் இப்னு ரஸீன்

தொகுப்பு : எம்.கெ. யாஸிர் 

தொடர் : 10


இஃதிகாப் 

➿➿➿➿➿


• எல்லா நேரத்திலும் இஃதிகாப் இருக்கலாம்.


• ஆகக் குறைந்தது ஒரு இரவு ஒரு பகள் இஃதிகாப் இருக்க வேண்டும்.

 ( நோன்போடுதான் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை இல்லை) 


• பள்ளிகளில்தான் இஃதிகாப் இருக்க வேண்டும். 


• பெண்களும் இஃதிகாப் இருக்கலாம். 


• ரமழானில் மிகவும் வழியுருத்தப்பட்டிருக்கிறது குறிப்பாக கடைசிப் பத்தில்


• இஃதிகாபிற்குச் சென்றால் முயற்சி செய்து அமல்கள் செய்வது சிறந்தது. 


• ரமழானுடைய ஒற்றைப்படையான லைலத்துல் கத்ருடைய தேடல்களில் இஃதிகாப் இருந்து கொள்வது மிகவும் சிறந்தது. 


• அவசியமான தேவைகளை தவிர பள்ளியில் இருந்து வெளியேறக் கூடாது. 


ஹஜ் 

✳✳✳


• முஸ்லிமான பருவ வயதை அடைந்த புத்தி சுவாதீனமுள்ள ஒவ்வொருவரின் மீதும் ஹஜ் செல்வதற்கான பொருளாதார வசதி இருந்தால் அவர் மீது ஹஜ் கடமை. நிபந்தனைகள் பூர்த்தியாகி விட்டால் பிற்போடாது உடனடியாக குறித்த வருடத்திற்கான ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும்.  இதே போன்றூதான் உம்றாவும். 

இஹ்ராம் (நிய்யத்) 


• தமத்துஃ, கிரான், இப்ராத் இதில் எந்த வகை ஹஜ் என்பதை நிய்யத் வைத்துக் கொள்ளல் வேண்டும். முதல் வகை (தமத்துஃ) சிறந்ததாகும். 


• நிய்யத் வைப்பதற்கென்று இஸ்லாம் சில மீகாத்துகளை(எல்லைகளை) சொல்லி இருக்கிறது. குறித்த எல்லைகளில் வைத்தே நிய்யத் வைக்க வேண்டும். 


• யார் குறித்த எல்லைகளுக்கு உட்பட்டவராக இருக்கிறாறோ அவர் அவருடைய இடத்திலிருந்தே நிய்யத் வைத்துக் கொள்ள முடியும். உதாரணமாக மக்கா வாசிகள் மக்காவில் வைத்து நிய்யத் வைக்கலாம். 


இஹ்ராமுடைய நிலையில் தடை செய்யப்பட்ட விடயங்கள் 

✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳✳


• மேலாடை, தலைப்பாகை, கோட், கீழாடை, குங்கும நிறம் மற்றும் வாசனையாலும் வர்ஸ் எனப்படும் அரபு கலையாலும் உறுவாக்கப்பட்ட ஆடை, சப்பாத்து போன்றவைகள்  அணியக் கூடாது. ஒருவருக்கு சப்பாத்து தவிர்ந்த வேறு செருப்புக்கள் இல்லாவிட்டால்  அவர் கரண்டைக் காலுக்கு மேலுள்ள பகுதியை வெட்டி விட்டு அணிந்து கொள்ளலாம். (வெட்டுதல் கடமை இல்லை. விரும்பினால் வெட்டிக் கொள்ளலாம். விரும்பினால் அப்படியே அணிந்து கொள்ளலாம்)


• பெண்கள் முகத்திரை, கையுரை, குங்கும நிறம் மற்றும் வாசனையாலும் வர்ஸ் எனப்படும் அரபு கலையாலும் உறுவாக்கப்பட்ட ஆடை அணியக் கூடாது. (பெண்கள் முகத்திரை மற்றும் கையுரை அணியக்கூடாது என்ற அறிவிப்பு இப்னு உமர் (ரழி) அவர்களின் சொந்தக் கூற்றாகும். நபி (ஸல்) வழியாக அறிவிக்கக் கூடிய செய்தி ஷாத்தானதாகும். இமாம் புஹாரி (ரஹ்) அவர்கள் கூட இந்த கருத்தை வழியுறுத்தியிருக்கிறார்கள்) 


• ஆரம்பமாக வாசனை பூசக் கூடாது. (ஏற்கனவே பூசப்பட்ட ஆடையும், உடலில் வாசம் பூசுவதும் விதிவிலக்கானது இஹ்ராத்துகென்று அணியப்பட்ட ஆடையில் பூசக்கூடாது) 


• முடியை களையக் கூடாது நியாயமான காரணங்கள் இருந்தாலே தவிர. (நியாயமான காரணங்களுக்காக ஒருவர் முடியை களைந்தால் அவர் மூன்று நாட்கள் நோன்பு வைக்க வேண்டும் அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் அல்லது ஒரு ஆட்டை குர்பான் கொடுக்க வேண்டும்) 


• கெட்ட வார்த்தைகள், மோசமாக நடந்து கொள்ளல், பாவம் செய்தல், வீண் தர்க்கங்களில் ஈடுபடல், திருமணம் செய்தல், செய்வித்தல் மற்றும் திருமணப் பேச்சு வார்த்தையில் ஈடுபடுதல் போன்றவைகள் கூடாது. 


• வேட்டையாடுதல் கூடாது. யாரொருவர் அப்படி கொன்று விடுகிறாரோ அதற்கு பரிகாரமக அதே போன்ற பிரிதொன்றை கொடுக்க வேண்டும். 


• பிரர் வேட்டையாடியதை சாப்பிடக் கூடாது. இஹ்ராமுடையவர் வேட்டையாடாதவாராகவும் அல்லது தன்னுடைய விருப்பத்தின் பெயரில் வேட்டையாடப்படாததாகவும் இருந்தால் அதை சாப்பிடுவதில் குற்றமில்லை. 


• இத்ஹிர் என்ற புல் வகையைத் தவிர மற்ற எந்த வகை தாவரங்களையும் சேதப்படுத்தல் கூடாது. 


• ஐந்து வகையான தீங்கிழைக்கக் கூடிய பிராணிகளை கொல்வதில் குற்றமில்லை. (வல் காகம், எலி, தேள், வெறி பிடித்த நாய், பாம்பு)


• மக்காவுடைய புனித பூமியுடைய சட்டங்கள் அனைத்தும் மதீனா புனித பூமிக்கும் பொருந்தும். 


• தாவரங்களை வெட்டக் கூடாது சேதப்படுத்தக் கூடாது என்பதில் அதனுடைய சொந்தக் காரர் அவர் வெட்டி சேதப்படுத்தாத வரை அவருக்கு அதை பயன்படுத்துவது கூடும். 


• தாயிப் எனும் ஊரிலுள்ள வஜ்த் எனும் பிரதேசத்திலும் வேட்டையாடுதல் மற்றும் தாவர வகைகளை வெட்டுதல், சேதப்படுத்தல் கூடாது. (அபூதாவுடைய வரக்கூடிய இந்த செய்தி பலவீனமானது)

12 Sept 2021

தனது செல்வம்...



இந்த உலகத்தில் எந்தவொரு மனிதனும் அவனுடைய செல்வம், தன்னை மரணமே வராமல் நிலையாக வைத்திருக்கும் என்று நினைப்பதில்லை. 

 கேட்டால் அப்படியில்லை என்றுதான் சொல்லுவான். 
 
மனிதனைப் படைத்து அவன் உள்ளங்களின் ஊசலாட்டத்தையும் அறியக் கூடிய ஏக இறைவனாகிய அல்லாஹ், செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று மனிதன் எண்ணுவதாக கூறுவதில் முரண்பாடு போல் தோன்றினாலும் அதில் எந்தவொரு முரண்பாடும் கிஞ்சித்தும் இல்லை. 
 
உண்மையில் மனிதன் தனது சொல்லால் அப்படிச் சொல்லாவிட்டாலும் செல்வம், தன்னை நிலையாக வைக்கும் என்பது போலத்தான் அவனுடைய உலக காரியங்கள் வியாபித்து இருக்கின்றன. 
 
இந்த உலகத்திலே நிரந்தரமாக வாழ வந்தவன் போல் செல்வத்தைக் கொண்டு பெருமை அடிக்கிறான்; தான தர்மங்களை விட்டும் பராமுகமாக இருக்கிறான்; தனது செல்வச் செறுக்கால் பலவீனமானவர்களை இழிவாகக் கருதுகிறான்; ஆடம்பரம், வீண் விரயங்களை கௌரவமாக கருதுகிறான்.
 
எந்த நேரத்திலும் மரணம் தன்னை நெருங்கும் என்ற சிந்தனை அற்று, அதற்கான மறுமை சேகரிப்பை புரக்கணித்து, செல்வச் செழிப்பில் உலகம் அவனை ஏமாற்றிக் கொண்டிருப்பதை அறியாமல் மூழ்கிக் கொண்டிருக்கிறான். 
 
இதே கருத்தைதான் அல்லாஹ் அவனது அருள் மறையில் இன்னோரிடத்தில் மிகத்தெளிவாக விபரித்து இவ்வாறு கூறி இருப்பதை அவதானிக்கலாம்.
 
وَ تَتَّخِذُوْنَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُوْنَ‌‏
 
 
பெரும் பெரும் மாளிகைகளை நிர்மாணிக்கின்றீர்கள் நீங்கள் என்றென்றும் வாழப் போவதைப்போல!
(அல்குர்ஆன் : 26:129)

 

8 Sept 2021

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்) தொடர் 09

 

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்)

🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷🔷


ஆசிரியர் : இமாம் ஷவ்கானி 

மரணம் : ஹிஜ்ரி 1250 

விரிவுரை : அஷ்ஷேய்க் முஜாஹித் இப்னு ரஸீன்

தொகுப்பு : எம்.கெ. யாஸிர் 

தொடர் : 09


நோன்பு

⚪⚪⚪⚪


• நம்பிக்கையான, நேர்மையான முஸ்லிம் பிறையைக் கண்டால் ரமழான் நோன்பு பிடிப்பது வாஜிப். அல்லது ஷஃபான் முப்பதாக பூர்த்தியாகிவிட்டாலும் ரமழான் நோன்பு பிடிப்பது வாஜிப்.


• 30 நாட்கள் ரமழானில் நோன்பு நோற்க வேண்டும். 30ஆவது இறவில் பிறை தென்பட்டாலே தவிர. 


• ஒரு ஊரிலே பிறை கண்டால் அந்த ஊருடைய உதயத்திற்கு ஒத்த ஊர்கள் அனைத்தும் நோன்பு வைக்க வேண்டும். 


• நோன்பு பிடிக்கின்றவர் பஜ்ருக்கு முன்னரே நிய்யத் வைத்தல் வேண்டும்.  


நோன்பை முறிக்கக் கூடிய விடயங்கள் 

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹


• சாப்பிடுவது 

• குடிப்பது 

• கணவன் மனைவி உறவு கொள்வது 

• தேவையேற்பட்டு வலிந்து வாந்தி எடுத்தல்


o தொடர்சியாக நோன்பு நேற்றல் கூடாது ( சஹரிலிருந்து அடுத்த நாள் மஃரிப் வரை அல்லது அதற்கடுத்த நாள் மஃரிப் வரை தொடர்தல்) 


o கணவன் மனைவி உறவு மூலம் யார் நோன்பை முறித்து விட்டாரோ அவர் லிஹாருடைய குற்றப் பரிகாரத்தை நிறைவேற்ற வேண்டும். ( வேண்டுமென்று அல்லாமல் மறதியினால் அல்லது உணர்ச்சி மேலீட்டால் கணவன் மனைவி உறவு ஏற்பட்டால் ஓர் அடிமையை உரிமை விடல் வேண்டும் அல்லது தொடர்ச்சியாக விடாமல் 60 நாட்கள்  நோன்பு நோற்க வேண்டும் அல்லது 60 ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்) 


o நோன்பு திறத்தலை அவசரப்படுத்துதலும் சஹரை பிற்படுத்துதலும் சிறந்தது. 


o மார்க்க ரீதியான காரணங்களுக்காக ஒருவர் நோன்பை விட்டால் அவர் கழா செய்ய வேண்டும். 


o பிரயாணிக்கு நோன்பை விடுவது சலுகை வழங்கப்பட்டிருக்கிறது


o யுத்த களத்தில் அல்லது பிரயாணத்தில் ஒருவர் அழிவை பயந்தால் அவர் நோன்பை விடுவது வாஜிப். 


o நோன்பு கடமையான நிலையில் ஒருவர் மரணித்தால் அவருடைய பொறுப்பாளர் அவர் சார்பாக நோன்பு வைக்க வேண்டும். (நேர்ச்சை நோன்பாக இருந்தால்தான் பொறுப்பாளர் நோன்பு வைக்க முடியுமே தவிர ரமழானுடைய கழா நோன்புக்காக அல்ல. ரமழானுடைய கழா நோன்புக்காக பொறுப்பாளர்கள் விட்ட நோன்புக்கு பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்) 


o வயதாகி முதிர்ந்து போய் நிரந்தர நோயாளியாக நோன்பை பிடிக்க முடியாதவர்கள் ( நிரந்தரமாக கழா செய்யவும் முடியாதவர்கள்) விட்ட ஒரு நோன்பிற்கு பகரமாக ஒரு ஏழைக்கு உணவளித்தல் வேண்டும். 


o சுன்னத்தான நோன்பை பொறுத்தவரை அவர் விரும்பினால் விடலாம் அல்லது தொடரலாம். கழாவும் கிடையாது குற்றப் பரிகாரமும் கிடையாது. 


சுன்னத்தான நோன்புகள்

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹


• ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு பிடித்தல். (ஷவ்வாலுடைய ஆரம்பத்திலிருந்து தொடர்தேர்ச்சியாக  பிடிக்க வேண்டும் என்பதல்ல. ஷவ்வால் மாதத்திற்குள் பிடிக்க வேண்டும்) 


• துல் ஹிஜ்ஜாவுடைய ஒன்பதாவது நாள் அறபா தின நோன்பு பிடித்தல்.


• முஹர்ரம் மாதத்தில் நோன்பு பிடித்தல் 


• ஷஃபான் மாதத்தில் நோன்பு பிடித்தல் 


• திங்கள், வியாழன் நேன்பு வைத்தல்


• ஐயாமுல் பீலுடைய நாட்களில் நோன்பு பிடித்தல். (மாதத்தில் வெள்ளை நாட்கள் என்று சொல்லக்கூடிய 13,14,15 நாட்கள்; இது அல்லாமல் மாதத்தில் 3 நாட்கள் பிடிப்பதும் சிறந்தது) 


• சுன்னத்து நேன்புகளிலே சிறந்தது ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு பிடிப்பதாகும். 


o காலம் முழுதாக நோன்பு பிடிப்பது வெறுக்கத்தக்கது. 


o சனிக்கிழமை தனியாகவோ அல்லது வெள்ளிக்கிழமை தனியாகவோ நோன்பு பிடித்தல் கூடாது. (தொடர்ந்து ஒருவர் ஒரு நாள் விட்டு ஒரு நாளோ அல்லது சிறப்பாக்கப்பட்ட சுன்னத்தான நோன்புகளையோ பிடிப்பதாக இருந்தால் அவர் இந்த சட்டத்திற்குள் வரமாட்டார் விரும்பி தேர்ந்தெடுத்துப் பிடிப்பதையே  குறிக்கும்) 


o பெருநாள் தினத்தில் நோன்பு பிடிப்பது கூடாது. 


o ஐயாமுத் தஷ்ரீக்குடைய அதாவது துல்ஹிஜ்ஜாவுடைய 11,12,13 நாட்களில் நோன்பு பிடித்தல் கூடாது. (தமத்துஃ ஹஜ் செய்தவர் குர்பான் கொடுக்க வசதி இல்லாவிட்டால் அவர் வைக்க வேண்டிய பத்து நோன்பில் மக்காவில் வைத்து பிடிக்க வேண்டிய மூன்று நேன்புகளில் இந்த மூன்று நாட்கள் விதிவிலக்காகும்) 


o ரமழானுக்கு முந்திய நாளும் அதற்கு முந்திய நாளும் நேன்பு வைக்கக் கூடாது.

4 Sept 2021

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்) தொடர் 08

 

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்)

🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠🟠


ஆசிரியர் : இமாம் ஷவ்கானி 

மரணம் : ஹிஜ்ரி 1250 

விரிவுரை : அஷ்ஷேய்க் முஜாஹித் இப்னு ரஸீன்

தொகுப்பு : எம்.கெ. யாஸிர் 

தொடர் : 08


தங்கம் வெள்ளியுடைய ஸகாத்

*************************************

•தங்கத்திலோ வெள்ளியிலோ ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்டால் பத்தில் ஒன்றில் கால்வாசில் ஒன்றில் கால்வாசில் ஒன்று கொடுக்க வேண்டும். அதாவது 2.5% சதவீதமாகும். அது அதனுடைய நிஸாபை(எல்லையை) அடையும் பட்சத்தில்.


•தங்கத்தினுடைய நிஸாப் 20 தீனாராகும். அதாவது 10.5 பவுன் அல்லது 85 கிராம் எனும் அன்னலவான எடுகோளை எடுக்கலாம். 


•வெள்ளியுடைய நிஸாப் 200 திர்ஹமாகும். அதாவது 595 கிராமாகும். இதற்கு குறைய ஸகாத் கிடையாது. 


•இது அல்லாமல் உள்ள எந்தவித ஆபரணங்களுக்கும் ஸகாத் கிடையாது.


•வியாபாரப் பொருட்களில் ஸகாத் கடமை இல்லை. (வியாபாரப் பொருட்களுக்கும் ஸகாத் கடமை என்பதுதான் சரியான கருத்து) 


தாவர விளைச்சல்களுடைய ஸகாத் 

*******************************************


•பத்தில் ஒன்று (10% சதவீதம்) ஸகாத் கொடுக்க வேண்டும். 


•தொலிக் கோதுமை, வாட் கோதுமை, சோலகம், பேரீத்தம் பழம், திராட்சை என்பவற்றில் கடமையாகும். பத்தில் ஒன்று என்பது மழை நீரினால் விளைச்சல் ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். 


•உரிமையாளரின் சொந்த உழைப்பில் நீர் பாய்ச்சி விளைந்திருந்தால் பத்தில் ஒன்றில் அறைவாசி (5% சதவீதம்) கடமையாகும். 


•இதனுடைய நிஸாப் 5 வஸக்குகளாகும். 1 வஸக் 60 ஸாவாகும். 1 ஸா 2.5 கிலோ கிராமாகும். ஆக 5 வஸக்குகள் என்பது 750 கிலோ கிராமாகும். 


•இது தவிர வேறு எந்த தாவர விளைச்சல்களிலும் ஸகாத் கடமை இல்லை. 


•தேனில் பத்தில் ஒரு பங்கு (10% சதவீதம்) ஸகாத் கொடுக்க வேண்டும். 72 கிலோ கிராம் நிஸாபை அடைந்தால்.


ஸகாத்துடைய பொதுவான அடிப்படைகள் 

**************************************************

•ஸகாத்தை அவசரப்படுத்திக் கொடுப்பது கூடும்.


•ஆட்சியாளர் அந்தந்த பிரதேசத்தில் எடுக்கப்பட்ட ஸகாத்தை அந்த பிரதேசத்திலே பகிர்ந்தளித்தல் வேண்டும். 


•ஆட்சியாளர் அநியாயக் காரராக இருந்தாலும் உரிய ஸகாத்தை ஒப்படைத்து விட்டால் அவருடைய கடமை முடிந்து விடும். 


ஸகாத் பெற தகுதியானவர்கள் / தகுதியற்றவர்கள்

*************************************************************

•8 கூட்டத்தினர் ஸகாத் பெற தகுதியானவர்களாவர். பரம ஏழைகள், ஏழைகள், இஸ்லாமிய ஆட்சியில் ஸகாத் வசூலிப்பதற்காக உழைப்பவர்கள், இஸ்லாத்தை நேசிப்பவர்கள் / இஸ்லாத்தை ஆதரவு வைப்பவர்கள், அடிமைகள், கடனாளிகள், அல்லாஹ்வின் பாதையில் போராடுபவர்கள், வழிப்போக்கர்கள்.


•நபி (ஸல்) அவர்களின் பரம்பரையினர் அவர்களால் அடிமை விடப்பட்டவர்கள் ஸகாத் பெற தகுதியற்றவர்களாவர். 


•பணக்காரர்கள், நல்ல முறையில் உழைத்து வருமானம் ஈட்ட முடிந்தவர்களும் ஸகாத் பெற தகுதியற்றவர்களாவர். 


ஸதகத்துல் பித்ர் (பெருநாள் தர்மம்) 

******************************************

•இதனுடைய அளவு 1 சாவாகும். (1 சா என்பது  2.5 கிலோ கிராமாகும்) 


•ஒவ்வொரு அங்கத்தினவர்களுக்கும் இது கடமையாகும். 


•அடிமைக்கு எஜமானும், குழந்தைகள் சிறுவர்களுக்கு அவர்களின் பொறுப்புதாரிகளும் கொடுக்க வேண்டும். 


•பெருநாள் தொழுவதற்கு முன் கொடுத்தாக வேண்டும். 


•அன்றைய தினம் சாப்பிடுவதற்கு எதுவுமில்லாதவர்கள் அல்லது அதற்கு போதுமான வசதியற்றவர்கள் அல்லது வேலைக்கு மட்டும் சாப்பிடுவதற்கு தேவையான வசதியைக் கொண்டவர்களுக்கு கடமை இல்லை. 


•ஸகாத் பெற தகுதியான 8 கூட்டத்தினருக்கும் இதனை வழங்கலாம். 


ஐந்தில் ஒன்று (20% சதவீதம்)  கொடுக்க வேண்டிய கட்டங்கள்

*************************************************************************


•யுத்த களத்தில் விடப்பட்ட கனீமத் சொத்துக்கள் 


•நிலத்தில் இருந்து எடுக்கப்பட்ட புதையல். புதையல் தவிர நிலத்தில் இருந்து எடுக்கப்பட்ட எந்தப் பொருளிலும் கடமை இல்லை.

1 Sept 2021

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்) தொடர் 07


 துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்)


ஆசிரியர் : இமாம் ஷவ்கானி 

மரணம் : ஹிஜ்ரி 1250 

விரிவுரை : அஷ்ஷேய்க் முஜாஹித் இப்னு ரஸீன்

தொகுப்பு : எம்.கெ. யாஸிர் 

தொடர் : 07


ஸகாத்

✴✴✴✴


பின்வருகின்ற சொத்துக்களில் ஸகாத் கடமையாகும் அதற்கு உரிமையாளர் கடமையாகின்ற குழுவில் இருந்தால்..


கால் நடைகள்

ஒட்டகம், மாடு, ஆடு


ஒட்டகத்தின் ஸகாத்

*********************** 

• 5 ஒட்டகங்கள் இருந்தால் ஒரு வருடம் பூர்தியான 1 ஆடு ஸகாத் கடமையாகும்.


• பின்னர் ஒவ்வொரு ஐந்திலும் 1 ஆடு கடமையாகும் (உ+ம் 10 ஒட்டகங்கள் = 2 ஆடுகள்) 


• 25ஐ அடைந்தால் ஒரு வருடம் பூர்த்தியான 1 பெண் ஒட்டகம் அல்லது இரண்டு வருடம் பூர்த்தியான 1 ஆண் ஒட்டகம் கடமையாகும். 35 வரைக்கும் இதுதான் கணக்காகும் ( உ+ம் 20 ஒட்டகங்கள் = 4 ஆடுகள், 34 ஒட்டகங்கள் = ஒரு வருடம் பூர்த்தியான 1 பெண் ஒட்டகம் அல்லது இரண்டு வருடம் பூர்த்தியான 1 ஆண் ஒட்டகம் ) 


• 36 ஆகிவிட்டால் இரண்டு வருடம் பூர்த்தியான 1 பெண் ஒட்டகம் கடமையாகும். 45 வரைக்கும் இதே கணக்குதான். (உ+ம் 45 ஒட்டகங்கள் = இரண்டு வருடம் பூர்த்தியான 1 பெண் ஒட்டகம்) 


• 46 ஆகிவிட்டால் மூன்று வருடம் பூர்த்தியான 1 பெண் ஒட்டகம் கடமையாகும். 60 வரைக்கும் இதே கணக்குதான். 


• 61 ஆகிவிட்டால் நான்கு வருடம் பூர்த்தியான 1 பெண் ஒட்டகம் கடமையாகும். 75 வரைக்கும் இதே கணக்குதான். 


• 76 ஆகிவிட்டால் இரண்டு வருடம் பூர்த்தியான 2 பெண் ஒட்டகங்கள் கடமையாகும். 90 வரைக்கும் இதே கணக்குதான். 


• 91 ஆகிவிட்டால் மூன்று வருடம் பூர்த்தியான 2 பெண் ஒட்டகங்கள் கடமையாகும். 120 வரைக்கும் இதே கணக்குதான். 


• 120ஐ தாண்டிவிட்டால் ஒவ்வொரு நாற்பதிலும் இரண்டு வருடம் பூர்த்தியான 1 பெண் ஒட்டகம் கடமையாகும். ஒவ்வொரு ஐம்பதிலும் மூன்று வருடம் பூர்த்தியான 1 பெண் ஒட்டகம் கடமையாகும். (உ+ம் 150 ஒட்டகங்கள் = மூன்று வருடம் பூர்த்தியான 3 பெண் ஒட்டகங்கள், 200 ஒட்டகங்கள் = இரண்டு வருடம் பூர்த்தியான 4 பெண் ஒட்டகங்கள் அல்லது மூன்று வருடம் பூர்த்தியான 5 பெண் ஒட்டகங்கள்) 


மாட்டுடைய ஸகாத்

***********************

ஒவ்வொரு 30 மாடுகளிலும் ஒரு வருடம் பூர்த்தியான 1 பெண் கன்றோ அல்லது 1 ஆண் கன்றோ கடமையாகும். (உ+ம் 60 மாடுகள் = ஒரு வருடம் பூர்த்தியான 2 கன்றுகள், 44 மாடுகள் = ஒரு வருடம் பூர்த்தியான 1 கன்று)


ஒவ்வொரு 40 மாடுகளிலும் இரண்டு வருடம் பூர்த்தியான 1 பெண் மாடோ 1 ஆண் மாடோ கடமையாகும். பின்னர் இதன் படியே கடமையாகும். (உ+ம் 70 மாடுகள் = ஒரு வருடம் பூர்த்தியான 2 கன்றுகள், 100 மாடுகள் = இரண்டு வருடம் பூர்த்தியான 2 மாடுகள் அல்லது ஒரு வருடம் பூர்த்தியான 3 கன்றுகள்)


ஆட்டுடைய ஸகாத்

**********************

40 ஆடுகள் இருந்தால் 1 ஆடு கடமையாகும். 120 வரைக்கும் இதே கணக்குதான். (உ+ம் 119 / 120 ஆடுகள் = 1 ஆடு)


121 ஆகிவிட்டால் 2 ஆடுகள் கடமையாகும். 200 வரைக்கும் இதே கணக்குதான். ( உ+ம் 119 / 200 ஆடுகள் = 2 ஆடுகள்) 


201 ஆகிவிட்டால் 3 ஆடுகள் கடமையாகும். 300 வரைக்கும் இதே கணக்குதான். 


301 ஆகிவிட்டால் 4 ஆடுகள் கடமையாகும். பின்னர் ஒவ்வொரு 100 ஆடுகளிலும் 1 ஆடு கடமையாகும். (399 வரைக்கும் 3 ஆடுகள்தான் என்பது பெரும்பாலான இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாகும்) 


சேர்ந்திருப்பதை பிரிக்கக் கூடாது பிரிந்திருந்த்தை சேர்க்கக் கூடாது. 


கடமையானதற்கு குறைய எதிலும் ஸகாத் இல்லை.


கூட்டாக செயற்படும் போது ஸகாத் கொடுக்கப்பட்ட பெருமதியை அதற்கேற்றாற் போல் பிரித்துக் கொள்ளல் வேண்டும். 


நோயுள்ள, அங்கக் குறையுள்ள, சின்னதாக மெலிந்த, குட்டி ஈன்றாதவைகளை ஸகாத் கொடுக்கக் கூடாது. உரிமையாளரிடமிருந்து அவர் நன்கு பராமரித்து விருப்பமாக வளர்த்து வந்ததை எடுக்கக் கூடாது

19 Aug 2021

ஊடகப் பயங்கரவாதம்..

 

ஊடகப் பயங்கரவாதம் என்ற ஒரு சொல்லாட்சி இருக்கிறது. ஆனால் என்னைக் கேட்டால் பயங்கரவாதத்தின் உயிர்நாடியே ஊடகங்கள்தான் என்பேன். 
 
ஏகதிபத்திய தேசங்கள் மற்றும் சர்வதிகார அரசுகளின் கனவுகள், நலவுகள், எதிர்பார்ப்புக்கள் எல்லாம் இப்படியான ஊடகங்களினாலே சாத்தியப்படுகிறது.
 
ஒரு இரையான்மையுள்ள நாட்டை தன்னுடைய அரசியல், புவியியல், பொருளியல் நலவுகளுக்காக ஆக்கிரமிப்பு செய்ய வேண்டும் என்றால் அல்லது ஒரு நாட்டின் பெரும்பான்மை சமூகத்தை தங்களுடைய அரசிற்கு ஆதரவாக சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக தூண்டி விட வேண்டும் என்றால், அதற்கு தோதுவான ஒரு நாடகத்தை தயாரித்து ஒளிபரப்ப வேண்டும்.
 
 இதனை மிக நேர்த்தியாக நிறைவேற்றுகின்றன அதன் அடிமை ஊடகங்கள்.
மட்டுமல்லாமல் மக்களின் மனப்பாங்கை திசை திருப்புவதில் ஊடகங்களின் பங்கு உச்சபட்சம் எனலாம். 
 
தன்னுடைய எஜமானின் எதிரிக்கு எதிராக, எதிராளிகளை உற்பத்தி பன்னுவதில் ஊடகங்களின் வகிபங்கு மிக மோசமானது.
 
இத்தகைய சூழ்ச்சிகள் நிறைந்த ஊடக வலைப்பின்னல்களுக்கு மத்தியில், நடுநிலை ஊடகங்களும் ஆங்காங்கே செயற்படுகின்றன என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் துரதிஷ்டம் அவைகள் பெரும்பாலும் மக்கள் மயப்படாத, வளங்கள் குறைந்த, மிகவும் அவல நிலையிலே காணப்படுகின்றன. 
 
விரும்பியோ விரும்பாமலோ ஊடகங்களினால் உள்ள உறவு இன்றியமையாததுதான். நாட்டு நடப்புக்கள், உலக விவகாரங்கள் போன்ற செய்திகளை தாங்கி நிற்பது ஊடகங்களே. 
 

ஆனால் நாம் விழித்துக் கொள்ள வேண்டும்; விடயதான விடயப்பரப்பை பொறுத்து, சமூகத்தின் தூரநோக்கை கருத்திற் கொண்டு, ஊடகங்களின் தன்மைகளை அறிந்து, வெளிவரும் செய்திகளின் ஆல அகலங்களை புரிந்து அதனை துறைசார் நல்ல அறிஞர்களிடம் ஒப்படைத்து விளக்கம் எடுத்துக் கொள்வதே புத்தி சாதூர்யமானது. மேலும் நாட்டு சூழலுக்கும், சமூககத்திற்கும் துரும்பிற்கும் பயன்படாத விடயங்களில் அவற்றை அலட்டிக் கொண்டு கருத்துச் சொல்ல முற்படுவதை விட அவற்றை மௌனமாக கடத்துவது, காலம் அவற்றின் முடிச்சுக்களை லாபகமாக அவிழ்த்து விடும்...

17 Aug 2021

மனித சிந்தனை..

சிந்திப்பது, கேள்வி கேட்பது, ஆராய்வது எல்லாம் மார்க்கம் வழியுறுத்திய சிறந்த நடைமுறைகள். ஆனால் எமது சிந்தனை ஆற்றளுக்கும் ஒரு எல்லைக் கோடு உண்டு. அந்த கோடுகள்தான் வஹீ எனும் இறைவனின் செய்திகள். 
 
அந்த எல்லைக் கோட்டைத் தாண்டி எமது சிந்தனைகளையும், கேள்விகளையும் நாம் விரிவு படுத்துவது எம்மை வழிகேட்டில் கொண்டு போய்ச் சேர்த்து விடும். 
 
'அல்லாஹ் அர்ஷின் மீது அமர்ந்தான்' என்றால் அதில் இரண்டு கருத்திற்கும், மாற்று கேள்விக்கும், வியாக்கியனப்படுத்துவதற்கும் இடமில்லை. 
 
உள்ளதை உள்ளது போன்று நம்பிக்கை கொள்வதே அஹ்லுஸ் ஸுன்னாக்களின் அகீதா. 
 
ஆனால் மாற்றுக் கொள்கை உடையோர் அதில் தங்களது சிந்தனையைப் பிரயோகித்து, கேள்விகளை அடுக்கி, 'அர்ஷின் மீது அமர்ந்தான்' என்றால், ஒன்றில் அர்ஷின் மீது அல்லாஹ்வுக்கு தேவை ஏற்படுவதாக இருக்கும் அல்லது அர்ஷ் அவனை விட சிறியதாகவோ பெரியதாகவோ இருக்கும். 
 
எனவே அதனுடைய விளக்கம் அல்லாஹ்வின் ஆட்சியைதான் குறிக்கும் என்று வஹீயை மீறிய சிந்தனையால் வழி தவறியுள்ளனர். 
 
அல்லாஹ்வின் சிருஷ்டிக்கும் ஆற்றலுடன் ஒப்பிடுகையில் எமது சிந்தனைகள் எல்லாம் தோற்றுப் போய் ஆச்சரிய விளிப்பில் போய் முடிந்து விடும். 
 
அந்தளவிற்கு நுண்ணறிவாளனும், பேறாற்றல் மிக்கவனுமாகிய, அந்த ரப்புல் ஆலமீனின் சொல் வாக்கை அப்படியே ஏற்று அதன் எல்லையில் இருந்து நம்பிக்கை கொள்வதுதான் ஒரு முஃமினின் பண்பாகும். 
 
மனிதனுக்கு சொற்பத்திலும் சொற்ப அறிவே வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்த வானம், பூமி, அண்ட சராசரங்களின் முடிச்சுக்களை அதன் படைப்பாளனைத் தவிர அவனுடைய படைப்பினங்களால் எப்படி அறிந்திட முடியும்?

 
சுபஹானல்லாஹ்!

 

5 Jul 2021

மத்தியஸ்தம்



கணவன் மனைவி பிரச்சினைகள் கணவன் மனைவிக்கு மத்தியிலே சுருங்கிக் கொள்வதுதான் ஆரோக்கியம். 

அதில் மூன்றாம் நபர் தலையிடும் போது அல்லது வெளி உலகிற்கு ஏதோ ஒரு வகையில் தெரிய வரும் போது இயல்பாக தீருகின்ற பிரச்சினை கௌரவ சிக்கலாக உறுமாறி தீராத பகையாக மாறக் கூடும்.

கணவன் மனைவிக்கு மத்தியில் பிரச்சினைகள் ஊற்றெடுப்பது என்பது இயல்பானது. பிரச்சினை இருவரில் ஒருவரின் விட்டுக்கொடுப்பு அல்லது மௌனமான இடைவெளிளால் இயல்பாக சமாதானமாவதும் சர்வசாதரணமானது. 
 
ஆனால் அதில் வெளி நபர்கள் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்தாக மாறுகின்ற போது, பிரச்சினைக்கான தீர்வில் இருவரின் கௌரவம் தடையாக வந்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. 
 
பெண்ணைப் பெற்ற, ஆணைப் பெற்ற பெற்றோர்களும் ஏதோ பிரச்சினை என்று தெரியவந்ததும் உடனே கட்டப்பஞ்சாயத்து செய்வதை நிறுத்த வேண்டும். அவர்கள் வழியில் அவர்களை விட்டுவிட்டு நல்லெண்ணம் வைப்பதே அவர்களின் பொறுப்பாகும். இல்லையென்றால் குளிக்கப் போய் சேறு பூசிக் கொண்ட நிலைதான் ஏற்படும்.

 

15 Jun 2021

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்) தொடர் 06

 

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்)


ஆசிரியர் : இமாம் ஷவ்கானி 

மரணம் : ஹிஜ்ரி 1250 

விரிவுரை : அஷ்ஷேய்க் முஜாஹித் இப்னு ரஸீன்

தொகுப்பு : எம்.கெ. யாஸிர் 

தொடர் : 06


ஜனாசாவுடைய சட்டங்கள்

************************************

• நோயாளர்களை நோய் விசாரிக்கச் செல்வது சுன்னா

• மரணத் தருவாயில் இருப்பவருக்கு ஷஹாதா கலிமா சொல்லிக் கொடுப்பது சுன்னா

• ஜனாசாவை கிப்லாவின் பக்கம் திருப்புவது சுன்னா (ஹதீஸில் இதற்கு சஹீஹான எந்தவித ஆதாரமும் இல்லை)

• மரணித்தவரின் இரண்டு கண்களையும் மூடி விடுவது சுன்னா 

• மரணித்துக் கொண்டிருப்பவருக்கு யாஸின் ஓதுவது சுன்னா (இது சம்பந்தமான ஹதீத்கள் ஆதரமற்றவைகளாகும்)

• ஜனாசாவை அடக்குவதற்கு இயன்றளவு அவசரப்படுத்தல் வேண்டும் மூன்று காரணங்களைத் தவிர. 

1. இறந்து விட்டார் என்பதை உறுதி செய்வதற்காக

2. கடன் விடயங்களுக்காக

3. ஜனாசாவை அடக்குவதற்குண்டான முக்கிய பணிகளுக்காக

 

• ஜனாசாவை முத்தமிடுதல் கூடும்

• மரணத்திற்கு அண்மித்தவர் இறைவன் பற்றிய நல்லெண்ணத்துடன் இருக்க வேண்டும். இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடல் வேண்டும். எல்லாவிதமான கடமைகள், உரிமைகள், பொறுப்புக்களை உரிய முறையில் ஒப்படைத்து விடல் வேண்டும். 

• உயிரோடு உள்ளவர்கள் இறந்த முஸ்லிமை குளிப்பாட்டுவது கடமை. 

• நெருக்கமானர் அவருடைய உறவினரை குளிப்பாட்டுவதற்கு மிகவும் தகுதியானவர். ஆணுக்கு ஆணும், பெண்ணுக்கு பெண்ணும் குளிப்பாட்ட வேண்டும். கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் குளிப்பாட்டுவது சிறந்ததாகும்.

• கழுவுதல் என்பது மூன்று முரை அல்லது ஐந்து முறை இருத்தல் வேண்டும். அல்லது அதைவிட அதிகமாக ஒற்றைப்படையில் இருத்தல் வேண்டும். 

• தண்ணீராலும் இலந்தை இலையைக் கொண்டும் கழுவ முடியும். கடைசியாக கற்பூரத்தை கலந்து கழுவுதல் வேண்டும். (இலந்தை இலை கற்பூரம் இல்லாவிட்டால் வேறு வாசனைப் பொருட்களை பயன்படுத்த முடியும்)

• வலது பக்கத்திலிருந்தும் வுழூவுடைய உறுப்புக்களை முற்படுத்தியும் கழுவுதல் சிறந்ததாகும். 

• யுத்த களத்தில் கொல்லப்பட்ட ஷஹீத், குளிப்பாடப் பட மாட்டார். 

• கபன் செய்வது வாஜிப். முடிந்தளவு மறைக்கக் கூடிய அமைப்பில் கபனிடல் வேண்டும். அளவுக்கதிகமாக, ஆடம்பரத்தை தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். 

• வெள்ளை நிறம் சிறந்தது. கட்டாயம் அல்ல. 

• முழு உடலையும் மூன்று முறை சுற்றி கபனிடுவது சுன்னா. 

• யுத்த களத்தில் கொல்லப்பட்ட ஷஹீத் எந்த ஆடையில் இருந்தாறோ அந்த ஆடையிலே கபனிட்டு அடக்கம் செய்தல் வேண்டும். 

• ஜனாசாவுடைய உடலிலும் கபன் ஆடையிலும் வாசம் பூசுவது சுன்னாவாகும். 


ஜனாசா தொழுகை

**************************

• இந்த தொழுகை பர்ளு கிபாயாவாகும். 

• ஆண் ஜனாசாவாக இருந்தால் ஜனாசாவின் தலைமாட்டில் இருந்து தொழுவிக்க வேண்டும். பெண் ஜனாசாவாக இருந்தால் ஜனாசாவின் இடுப்புப் பகுதியில் இருந்து தொழுவித்தல் வேண்டும். 

• தொழுகையில் நான்கு முறையோ ஐந்து முறையோ தக்பீர் சொல்லல் வேண்டும்.

• ஆரம்ப முதலாவது தக்பீருக்குப் பின்னால் சூரத்துல் பாத்திஹா ஓதுதல் வேண்டும். விரும்பினால் சூரத்துல் பாத்திஹாவிற்குப் பிறகு துணை சூரா ஏதாவது ஒன்றை ஓத முடியும்.

• இரண்டாவது தக்பீருக்குப் பின்னால் ஸலவாத்துல் இப்ராஹீமா ஓதுதல் வேண்டும்.

• மூன்றாவது தக்பீருக்கு பின்னால் ஜனாசாவிற்காக தூஆ பிரார்த்தனை செய்ய வேண்டும். 

• நான்காவது தக்பீர் சொல்லி ஸலாம் கொடுத்தல் வேண்டும்.

• ஒவ்வொரு தக்பீருக்குப் பின்னாலும் வந்த துஆக்களை கேட்டுக் கொள்ளலாம்.

• யுத்த களத்தில் கனீமத் பொருட்களை பிரிப்பதற்கு முதல் அதில் ஏதாவதொன்றை எடுத்து மரணித்தால் அவருக்கு ஜனாஸா தொழுகை இல்லை. 

• தற்கொலை செய்தவருக்கு தொழுவித்தல் கூடாது

• காஃபிருக்கு தொழுவித்தல் கூடாது.

• யுத்த களத்தில் கொல்லப்பட்ட ஷஹீத்களுக்கு தொழுவித்தல் கூடாது. 

• கப்ரில் ஜனாசாவிற்காக தொழலாம்

• ஜனாசாவிற்கு தொழுகை நடாத்தப் படா விட்டால் அவருக்காக காயிப் ஜனாசா தொழுகை நடத்தலாம்.


• மிக வேகமாக ஜனாசாவை கொண்டு செல்லல், ஜனாசாவோடு நடந்து செல்லல், ஜனாசாவை சுமத்தல் ஆகியவை சுன்னாவாகும்.

• ஜனாசாவை முந்திச் சென்றாலும் அல்லது பிந்தொடர்ந்து சென்றாலும் அதற்கான கூலியில் வித்தியாசமில்லை. 

• வண்டியில் போவது வெறுக்கத்தக்கது. வரும் பொழுது வண்டியில் வருவது விரும்பத்தக்கதாகும். 

• ஜனாசாவை பரை அடித்தல், சத்தம் போட்டு அழுதல், ஜனாசாவிற்குப் பின்னால் நெருப்புப் பந்தல் கொண்டு செல்லல், ஆத்திரத்தில் ஆடையை கிழித்துக் கொள்லல், அழிவை வேண்டுதல், போன்றவைகள் கூடாது. ஜனாசாவை கொண்டு செல்லும் போது உட்காரக் கூடாது ஜனாசாவை வைக்கும் வரைக்கும்.


ஜனாசாவை அடக்குதல் 

******************************


• அடக்கும் போது மிருகங்கள், பிராணிகள் சேதம் விளைவிக்காத வகையில் பாதுகாப்பாக அடக்குதல் வேண்டும். 

• நேரடியாக குழி தோன்றி அடக்குவதும் தவறில்லை. குறுக்காக வைத்து அடக்குவது சிறந்தது. 

• மையித்தின் கால்மாட்டாக கப்றில் வைக்க வேண்டும் 

• வலது புறம் கிப்லாவை முன்னோக்கி வைத்தல் வேண்டும். 

• ஜனாசாவில் கலந்து கொண்டவர்கள் மூன்று பிடி மண் போடுதல் சிறந்தது. (இதற்கான ஆதரபூர்வமான ஹதீத்கள் இல்லை) 

• கப்றுகளை ஒரு சாணுக்கு மேல் உயர்த்துதல் கூடாது. (தற்காலிக அடையாளப்படுத்துவதற்காக சிறு அடையாளங்களை வைப்பது குற்றமாகாது)

• இறந்தவர்களை ஸியாரத் செய்வது மார்க்கமாகும். ஸியாரத் செய்பவர் கிப்லாவை முன்னோக்கி இருத்தல் வேண்டும்.(கிப்லாவை முன்னோக்கி இருத்தல் என்பதற்கு ஆத்ரபூர்வமான ஹதீத்கள் இல்லை) 

• கப்ருகளை பள்ளிகளாக எடுத்துக் கொள்ளல்; கப்ருகளை அலங்கரித்தல்; அதில் விளகேற்றல், அதன் மேல் உட்காருதல், இறந்தவர்களை ஏசுதல் போன்றவைகள் கூடாது. 

• ஜனாசாவுடைய சொந்தங்களுக்கு ஆறுதல் சொல்லுதல் சுன்னாவாகும். 

• ஜனாசாவுடைய வீட்டுக்கு சாப்பாடு கொடுத்தல் சுன்னா.

10 Jun 2021

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்) தொடர் 05

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்)








ஆசிரியர் : இமாம் ஷவ்கானி 
மரணம் : ஹிஜ்ரி 1250 
விரிவுரை : அஷ்ஷேய்க் முஜாஹித் இப்னு ரஸீன்
தொகுப்பு : எம்.கெ. யாஸிர் 
தொடர் : 05


தப்பிப்போன தொழுகைகளை தொழுதல்

******************************************************** 

• ஒருவர் தொழுகையை வேண்டுமென்று விட்டிருந்தால் அல்லாஹ்வுடைய கடன்தான் நிறைவேற்றப்படுவதற்கு மிகவும் தகுதியானது. (வேண்டுமென்று விட்டவருக்கு தவ்பாவைத் தவிர கலா கிடையாது)

• நியாயமான காரணத்தோடு ஒருவருக்கு தொழுகை விடுபட்டால் அது கலாவே அல்ல. குறித்த காரணம் நீங்கிய பிறகு அவர் அந்த தொழுகையை நிறைவேற்றுகிறார். ஆனால் பெருநாள் தொழுகையை தவிர.


ஜும்ஆ தொழுகை

*************************

• பருவமைந்த எல்லோருக்கும் ஜும்ஆ கடமை நான்கு பேர்களைத் தவிர.

1. பெண்

2. அடிமை

3. பிரயாணி

4. நோயாளி

• ஜும்ஆவுடைய தொழுகைக்கும் மற்ற தொழுகைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை தொழுகைக்கு முன்னால் இரண்டு குத்பாக்களைத் தவிர. 

• ஜும்ஆவுடைய நேரம் லுஹருடைய நேரமாகும். 

• ஜும்ஆவுக்கு கலந்து கொள்ளக் கூடியவர் ஏனையவர்களின்  தோள்புஜங்களில் ஏறி ஏறி கடந்து செல்லக் கூடாது.

• இரண்டு குத்பாக்களையும் செவிமடுத்துக் கேட்க வேண்டும் 

• நேரத்தோடு சமூகமளிப்பது சுன்னா, வாசம் பூசிக்கொள்வது சுன்னா, அழகுபடுத்திக் கொள்வது சுன்னா, இமாமிற்கு நெருக்கமாக் இருப்பதும் சுன்னாவாகும். 

• குறைந்தபட்சம் ஒரே ஒரு ரக்காத்தில் முழுமையான ஒரு ருகுஃ கிடைத்தாலும் ஜும் ஆ கிடைத்த்தற்கு சமனாகும். 

• பெருநாள் தினமாக இருந்தால் ஜும்ஆ தொழுகை விரும்பத்தக்கதாகும். 


இரண்டு பெருநாள் தொழுகைகள் 

*********************************************

• பெருநாள் தொழுகை இரண்டு ரக்காத்துக்களாகும். முதலாவது ரக்காத்தில் கிராத்துக்கு முன்னர் (ஆரம்ப தக்பீர் தவிர்ந்த) ஏழு தக்பீர்களாகும். இரண்டாவது தக்பீரில் கிராத்துக்கு முன்னர் (ஆரம்ப தக்பீர் தவிர்ந்த) ஐந்து தக்பீர்களாகும். பின்னர் குத்பா செய்தல் வேண்டும். 

• அழகான ஆடைகளை அணிதல், ஊரை விட்டு வெளியே போதல் (திடலுக்கு), போகின்ற பாதையல்லாத வேறு பாதைகளில் திரும்பி வருதல், ஹஜ்ஜிப் பெருநாள் அல்லாமல் நோன்புப் பெருநாளில் சாப்பிட்டுச் செல்லல் போன்றவைகள் சுன்னாவாகும். (ஹஜ்ஜிப் பெருநாளில் சாப்பிடாமல் செல்லுதல் என்பது பலவீனமான ஹதீதாகும்)

• பெருநாள் தொழுகைக்கு அதானும் இல்லை இகாமத்தும் இல்லை. 

• நேரம் சூரியன் ஈட்டியளவிற்கு உயர்ந்து விடுவதுதான் இதனுடையா ஆரம்ப நேரமாகும். சூரியன் உச்சியிலிருந்து சாயும் வரைக்கும்தான் இதனுடைய கடைசி நேரமாகும்.


அச்ச நிலை தொழுகை

*******************************

• நபி (ஸல்) அவர்கள் இத்தொழுகையை ஒவ்வொருவிதமாக தொழுது இருக்கிறார்கள். இதில் எந்த முறைப்படி தொழுதாலும் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படும். 

• யுத்தத்துடைய பயங்கரம் மிகவும் பலமாக இருந்தால், கடுமையான மோதல் நிலமை உறுவாகிவிட்டால் வாகனத்திலுல் தொழலாம்; நின்று கொண்டும் தொழலாம், நடந்து கொண்டும் தொழலாம். கிப்லாவை முன்னோக்காமலும் தொழலாம்; சைக்கினை மூலமும் தொழலாம்.  


பிரயாணத் தொழுகை

******************************

• ஒரு பிரயாணத்திற்காக ஊரிலிருந்து வெளியாகியவர் கஸ்ர் செய்வது வாஜிபாகும். ஒரு பரீஃத் தூரமாக இருந்தாலும் கஸ்ர் செய்ய வேண்டும். கஸ்ர் தூரத்தை வரையறுக்க முடியாது. (ஒரு பரீஃத் என்பது நான்கு பர்ஸஹ்க் ஒரு பர்ஸஹ்க் மூன்று மீள் எனவே ஒரு பரீஃத் என்பது பன்னிரெண்டு மீளாகும். அரபியில் ஒரு மீளின் தூரம் என்பது ஒரு மனிதன் வெட்டவெளியில் பார்க்கும் போது ஒரு உருவம் மறைகின்ற வரைக்குமான தூரமாகும். கிட்டத்தட்ட ஒரு மைல்லிற்கு சமனாக இருக்க வாய்ப்பு இருக்கிறது) 

• பிரயாணத் தூரத்தை அடைந்து திரும்பி வருகின்ற நேரத்தில் சொந்த ஊருக்கு அண்மித்த ஊரில் வைத்தும் கஸ்ர் செய்யலாம். ஊர் எல்லைக்குள் நுழையும் வரைக்கும். 

• ஒரு ஊரிற்கு பயணப்பட்டு அந்த ஊரில் நிலையாக தங்குவதற்கு உத்தேசமின்றி பயண வேலையாக காலம் கடக்குமானால் இருபது நாள் வரைக்கும் அவருக்கு கஸ்ர் செய்யலாம். ஒரு ஊரிற்கு நான்கு நாட்கள் தங்குவதாக உத்தேசித்துவிட்டு பயணப்பட்டால் அந்த ஊரில் ஐந்தாவது நாளிலிருந்து கஸ்ர் செய்யலாம். 

• முற்படுத்தியோ பிற்படுத்தியோ ஒரு அதான் இரண்டு இகாமத் சொல்லி ஜம்மும் செய்து கொள்ளலாம்.  


சூரிய சந்திர கிரகண தொழுகை

********************************************

• இந்தத் தொழுகை சுன்னாவாகும். (கடமை என்ற கருத்துடான் சரியானதாகும்)

• ரக்காத்துக்களின் எண்ணிக்கை இரண்டாகும். ஒவ்வொரு ரக்காத்திலும் இரண்டு ருக்கூஃக்கள் செய்ய வேண்டும். நபி (ஸல்) அவர்கள் ஒரு ரக்காத்தில் மூன்று, நான்கு, ஐந்து ருக்கூஃக்கள் செய்தார்கள் போன்ற அறிவிப்புக்களும் இருக்கின்றன. (ஆனால் இரண்டு ருக்கூஃக்கள் அல்லாத அனைத்து அறிவிப்புக்களும் பலவீனமானதாகும்)

• ஒவ்வொரு ரக்காத்திலும் முதலாவது ருக்கூஃவிற்குப் பிறகு இரண்டாவது ருக்கூஃவிற்காக நிலைக்கு வந்து ஓதுதல் வேண்டும். ஒவ்வொரு ரக்காத்திலும் ஒரு ருக்கூஃ செய்தார்கள் என்றும் அறிவிப்பும் இருக்கின்றது. (ஆனால் ஒரு ருக்கூஃ சம்பந்தமான அறிவிப்பும் பலவீனமானதாகும்)

• துஆ கேட்டல், தக்பீர் சொல்லுதல், தர்மம் செய்தல், பாவமன்னிப்பு தேடுதல் போன்றவற்றில் தொழக் கிடைக்காதவர் ஈடுபடுதல் சிறந்த்தாகும். 


மழை வேண்டித் தொழுதல்

*************************************

• பஞ்சம் மற்றும் வரட்சியான காலப்பகுதியில் இந்த தொழுகையை தொழுவது சுன்னா.

• இரண்டு ரக்காத்துக்கள் தொழ வேண்டும். தொழுகைக்கு பின் திக்ருகளை அதிகப்படுத்தி, இறைவனை வழிபடுதலை ஆர்வமூட்டி, பாவங்களை தவிர்க்குமாறு எச்சரித்து ஒரு குத்பா நிகழ்த்தப்பட வேண்டும். 

• இமாமும், தொழுகையில் கலந்து கொள்பவர்களும் நிறைய பாவமன்னிப்புத் தேட வேண்டும். 

• பஞ்சம், வரட்சி நீங்குவதற்கு எல்லோருமாக சேர்ந்து துஆ கேட்க வேண்டும். (கூட்டாக அல்லாமல் தனித்தனியாக கையேந்தி மௌனமாக கேட்க வேண்டும்) 

• ஆண்கள் எல்லோரும் தங்களுடைய ஆடைகளின் உள்பக்கத்தை வெளிப்பக்கமாக மாற்றி அணிந்து கொள்ள வேண்டும். (இது இமாமுக்கு மட்டுமே பொருத்தமானது அவர் மேலாடை போட்டிருந்தால் மாத்திரம்)

8 Jun 2021

புத்திசாலி மனிதன்...

 

காலங்கள் ஒரு போதும் பின்னோக்கி நகரப் போவதில்லை...
இன்பகரமான அனுபவங்கள் ரசித்து மகிழ மீண்டு வருவதில்லை...
கஷ்டமான அனுபவங்கள் அனுதினமும் பின் தொடர்வதில்லை..
மரணம் எந்தவொரு மனிதனையும் விட்டு கடந்து போவதில்லை...
அந்த மரணம் எப்போது வரும் என்பதையும் யாராலும் சொல்ல முடிவதில்லை...
என்றால்,
ஒரு புத்திசாலி மனிதன், உலகத்தை நிரந்தர மறுமைக்காக செலவழிக்கமால் இருப்பதை விட்டும் ஒருகாளும் பராமுகமாக இருக்க மாட்டான்..

2 Jun 2021

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்) தொடர் : 03

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்)
ஆசிரியர் : இமாம் ஷவ்கானி
மரணம் : ஹிஜ்ரி 1250
விரிவுரை : அஷ்ஷேய்க் முஜா
ஹித் இப்னு ரஸீன்
தொகுப்பு : எம்.கெ. யாஸிர்
தொடர் : 03

மாதவிடாய்
*****************
• மாதவிடாயுடைய காலப்பகுதியை பொருத்தவரையில் அதனுடைய குறைந்த நாள் அளவென்ன கூடிய நாள் அளவென்ன என்பதில் சொல்லத்தக்க அளவில் எந்தவித ஆதாரமும் இல்லை. அதே போன்றுதான் சுத்தம் என்பதும் வரையரை கிடையாது.
• நிலையான வழமைக் கொண்ட பெண் அதற்கு ஏற்றாற் போல் செயற்பட வேண்டும்.
• வழமையை தீர்மானிக்க முடியாத பெண்கள் அவங்களுக்குறிய துணை அடையாளங்களை வைத்து செயற்பட வேண்டும். பெண்களுக்குத் தெரியும் மாதவிடாய் இரத்தம் ஏனைய இரத்தத்தை விட வித்தியாசப்படும்.
• ஒரு பெண் மாதவிடாய் பெண்ணாக எப்பொழுது மாறுவாள் என்றால், மாதவிடாய் இரத்தம் அவர்கள் அறிந்த அமைப்பில் எப்போது வருகின்றதோ அப்போதிலிருந்து மதாவிடாய் பெண்ணுக்குறிய மார்க்க சட்டத்திற்குள் நுழைகின்றாள்.
• மேலதிக உதிரப்போக்குள்ள பெண்ணை பொறுத்த வரை அவளுக்கு தெரியும் இந்த இரத்தம் மாதவிடாய் இரத்தத்தை விட வித்தியாசமானது என்று. எனவே மேலதிக உதிரப்போக்குள்ள பெண்ணுக்குறிய சட்டத்திகுள் அவள் நுழைகின்றாள்.
• மேலதிக உதிரப்போக்குள்ள பெண்ணின் சட்டம்; இரத்ததையும் அதன் அடையாளத்தையும் கழுவிக் கொள்ளல் வேண்டும். ஒவ்வொரு தொழுகைக்கும் வுழூ செய்து கொள்ள வேண்டும்.
மாதவிடாய் பெண்கள் செய்யக் கூடாதவை
**********************************************************
• தொழக் கூடாது
• நோன்பு வைக்கக் கூடாது
• சுத்தத்துக்குப் பின்னால் குளிக்கும் வரைக்கும் குடும்ப உறவில் ஈடுபடக் கூடாது (கருத்து முரண்பாடு உள்ள விடயமாகும் மாதவிடாய் இரத்தம் நின்று விட்டாலே குடும்ப உறவில் ஈடுபட முடியும் என்பதே சரியானது)
• மாதாவிடாய் மூலமாக விடுபட்ட நோன்புகளை கலா செய்ய வேண்டும். தொழுகையை கலா செய்ய வேண்டியதில்லை.
பிரசவத் தீட்டு
********************
• இதனுடைய அதிக நாள் 40 நாட்களாகும்
• இதனுடைய ஆகக் குறைந்த அளவு என்பதற்கான எந்த வித ஆதரமும் இல்லை.
• மாதாவிடையுடைய சட்டம்தான் இதற்கும் உரியது
தொழுகை
---------------
தொழுகையுடைய நேரங்கள்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>
லுஹருடைய ஆரம்பம்
********************************
• சூரியன் உச்சியிலிருந்து சாய ஆரம்பிக்கும் நேரம்
• சூரியன் உச்சியிலிருந்து சாய ஆரம்பித்தல் என்பது நாம் சூரிய ஒளி படுகின்ற இடத்தில் இருக்கும் போது எமது நிழல் எம்மைச் சுற்றி சுருங்கி இருக்காமல் ஏதவது ஒரு பக்கத்தில் சாய்ந்து இருத்தலாகும்.
லுஹருடைய கடைசி / அஸருடைய ஆரம்பம்
*************************************************************
• ஒவ்வொரு பொருளுடைய நிழலும் குறித்த பொருடைய அளவிற்கு சமனாக வரும் நேரமாகும். ஆனால் சூரியனின் ஓட்டத்தின் காரணமாக ஏற்படும் சாய்வை கணக்கெடுக்கக் கூடாது.
அஸருடைய கடைசி நேரம்
************************************
• சூரியன் எதுவரைக்கும் இலங்கிக் கொண்டிருக்கக் கூடிய வெண்மையோடு இருக்கிறதோ அது வரைக்கும் அஸருடைய நேரம். அதனுடைய வெண்மைத் தன்மை சிவப்பாகவோ அல்லது இளம் சிவப்பாகவோ மாற ஆரம்பித்தால் அது அஸருடைய கடைசி நேரமாகும்.
மஹ்ரிபுடைய ஆரம்ப நேரம்
**************************************
• சூரியன் மறையும் நேரம்
மஹ்ரிபுடைய கடைசி நேரம் / இஷாவுடைய ஆரம்ப நேரம்
****************************************************************
• சிவந்த அடி வானம் அற்றுப் போய், வானம் முழுமையாக இருளாக இருக்கும் நேரமாகும்.
இஷாவுடைய கடைசி நேரம்
*************************************
• இரவுடைய நடுநிசியாகும். மஹ்ரிபுடைய நேரத்திலிருந்து பஜ்ர் ஆரம்ப நேரம் வரைக்குமான அரைப் பங்கு வரை இஷாவுடைய கடைசி நேரமாகும்
பஜ்ருடைய ஆரம்ப நேரம்
************************************
• நம்முடைய பகுதிக்கு முதன் முதலாக சூரியனின் வெளிச்சம் படுகின்ற நேரமாகும்.
பஜ்ருடைய கடைசி நேரம்
***********************************
• சூரியனுடை ஒரு கீற்று படுகின்ற நேரம். அதாவது சூரியன் உதிக்கும் நேரமாகும்.
 யார் தனது தொழுகையை விட்டும் தூங்கினாறோ அல்லது மறந்து விட்டாரோ அவருடைய வக்து நேரம் என்பது அவருக்கு ஞாபகம் வருகின்ற நேரமாகும்.
 யாருக்கு நியாயமான காரணத்தினால் தொழுகைக்கு சற்று நேரம் கடந்து விட்டால் அவருக்கு அந்தத் தொழுகையில் ஒரு ரக்ஆத் கிடைத்தாலும் முழு தொழுகையும் கிடைத்ததற்கு சமனாகும்.
 உரிய நேரத்திற்கு தொழுவது வாஜிபாகும். நேரத்திற்கு உட்பட்ட நேரத்தில் தொழுவதும் வாஜிபாகும்.
 நியாயமான காரணங்களுக்காக ஜம்ஊ (சேர்த்துத் தொழுதல்) செய்தல் அனுமதிக்கப்பட்டுள்ளது. (ஊரில் இருந்தாலும் சரி வெளியூரில் இருந்தாலும் சரி)
 தயம்மம் செய்தவரும், தொழுகையை முழுமையாக தொழ முடியாதவரும் அல்லது சுத்தத்தை முழுமையாக செய்ய முடியாதவரும் வக்து முடிகின்ற கடைசி நேரம் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களும் உரிய நேரத்தில் தொழுவது வாஜிபாகும்.
தொழுவதற்கு வெறுக்கப்பட்ட நேரங்கள்
*******************************************************
 மக்காவைத் தவிர அனைத்து பிரதேசங்களுக்கும் வெறுக்கத்தக்க நேரங்களுக்குறிய சட்டம் பொருந்தும். (மக்காவைத் தவிர என்பது ஹதீஸ்களின் புரிதளுக்கு அப்பாற் பட்டதாகும். எல்லாப் பிரதேசங்களுக்கும் பொதுவான சட்டம் என்பதே சரியான கருத்தாகும்)
1. சூரியன் உதிக்கின்ற நேரம்
2. சூரியன் உச்சியில் இருந்து சாயும் வரைக்குமுள்ள நேரம்
3. அஸருக்குப் பிறகு சூரியன் சிவப்பாகவோ அல்லது இளம் சிகப்பாகவோ மாறி சூரியன் மறையும் வரைக்குமுள்ள நேரம்.

 

1 Jun 2021

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்) தொடர் : 02

 

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்)
ஆசிரியர் : இமாம் ஷவ்கானி
மரணம் : ஹிஜ்ரி 1250
விரிவுரை : அஷ்ஷேய்க் முஜாஹித் இப்னு ரஸீன்
தொகுப்பு : எம்.கெ. யாஸிர்
தொடர் : 02

 

வுழூ

1. வுழூ பருவமடைந்த ஒவ்வொருவருக்கும் கடமை தொழுவதாக இருந்தால்..
2. வுழூ செய்வதற்கு முன்னால் பிஸ்மில்லாஹ் சொல்வது சுன்னா
 

வுழூவின் ஒழுங்குகள்


1. வாய் கொப்பளித்தல்
2. நாசிக்கு நீர் செலுத்துதல் அதை சிந்துதல்
3. முழு முகத்தையும் கழுவுதல்
4. இரண்டு கைகளையும் முழங்கை வரை கழுவ வேண்டும்
5. தலையை மஸ்கு செய்ய வேண்டும் அதே தண்ணீரால் இரண்டு காதுகளையும் கழுவ வேண்டும்.
தலைப்பாகையோ, தொப்பியோ, முக்காடோ போட்டிருந்தால் தலையில் சிறிதளவு மஸ்கு செய்து அதன் மேல் முழுமையாக செய்ய வேண்டும்.
6. கரண்டைக் கால் அளவு இரண்டு கால்களையும் கழுவ வேண்டும். சப்பாத்து அணிந்து இருந்தால் சப்பாத்தின் மேல் மஸ்கு செய்யலாம்.
7. வுழூவுக்குறிய நிய்யத் இருந்தாலே தவிர அது மார்க்கம் சொல்லக்கூடிய வுழூவாக மாறும்.
8. தலை அல்லாத மற்ற பகுதிகளை மூன்று முறை செய்வது சிறந்தது. தலையை ஒரு முறைதான் மஸ்கு செய்ய வேண்டும்.
9. வுழூ எடுக்கும் போது பல் துலக்குவதை முற்படுத்துதல் சிறந்தது.
10. வுழூ எடுப்பதற்கு முன்னர் மணிக்கட்டு வரை இரண்டு கைகளையும் மூன்று முறை கழுவிக் கொள்ளுதல் சுன்னா
 

வுழூவை முறிக்கும் காரியங்கள்


1. மனிதனுடைய மலசலப் பாதையுனூடாக எந்தவொன்று வெளியாகினாலும்
2. எதன் காரணமாக குளிப்பு கடமையாகுமோ அதன் காரணமாகவும் வுழூ முறியும்
3. ஒட்டக இறைச்சி சாப்பிடுதல்
4. ஆழ்ந்து தூங்குதல்
5. வாந்தி எடுத்தல் இது போன்றவைகள் (இதற்கு ஆதாரம் இல்லை)
6. இச்சையோடு அந்தரங்க உறுப்புக்களை தொடுதல் 
 

குளிப்பு

குளிப்பு கடமையாகும் காரியங்கள்


1. மனிதனுக்கு ஆசையின் காரணமாக மனி வெளிப்படுதல். இது சிந்திப்பதன் மூலம் இந்திரியம் வெளிப்படுவதையும் குறிக்கும்.
2. ஆண் பெண் உறுப்பு சந்திதுக் கொள்ளுதல்
3. மாதாவிடாய் இரத்தம் நின்றவுடன்
4. பிரசவத்தின் காரணமாக வெளிப்படும் இரத்தம் நின்றவுடன்
5. தூக்கத்தில் ஸ்கலிதம் ஆகிவிட்டதாக தனது ஆடையில் ஈரத்தை காணுதல்
6. மரணமாதல் (அவர் சார்பாக பிறருக்கு கடமை)
7. இஸ்லாத்திற்கு நுழைதல் (கருத்து முரண்பாடு உண்டு) 
 

கடமையான குளிப்பின் குறைந்த பட்ச நிபந்தனைகள்

 
1. முழு உடலிலும் தண்ணீர் படும் வகையில் தண்ணீரை ஊற்றல்
2. முழு உடலும் நனைகின்ற வகையில் தண்ணீரில் மூழ்குதல்
3. கடமையான குளிப்பிற்குறிய நிய்யத் இருந்தால் மாத்திரம்தான் அது மார்க்கம் சொல்லக்கூடிய குளிப்பாக மாறும்.
4. வுழூவுடைய உறுப்புக்களை முற்படுத்துவதும் வலதால் செய்வதும் விரும்பத்தக்கது.
5. பெண்கள் கட்டுமுடியை அவிழ்க்க வேண்டிய அவசியமில்லை
• ஜும்ஆ குளிப்பு சுன்னத்தாகும், இரு பெருநாள் குளிப்பும் சுன்னத்தாகும் (ஜும்ஆ குளிப்பு ஆதார அடிப்படையில் இரு பாலாருக்கும் வாஜிப், இரு பெருநாள் குளிப்புகள் சுன்னா என்பதை பொருத்த வரை அனைத்து ஆதாரங்களும் பலவீனமானவைகள்)
• ஜனாசாவை குளிப்பாட்டுகின்றவர் குளிப்பது சிறந்தது
• இஹ்ராமிற்காக குளிப்பது சிறந்தது
• மக்காவில் நுழைவதற்காக குளிப்பது சிறந்தது 
 

தயம்மம்

 
 தயம்மம் செய்தால் வுழூ, குளிப்பு மூலமாக எதுவெல்லாம் கூடுமோ அதுவெல்லாம் கூடும்.
தயம்மத்தின் நிபந்தனைகள்
***************************************
• தண்ணீர் கிடைக்காமல் இருத்தல்
• நியாயமான காரணங்களுக்காக தண்ணீரை உபயோகிக்க முடியாமல் இருத்தல்
 

தயம்மத்தின் ஒழுங்குகள் 

 
• தயம்மத்தின் உறுப்புக்கள் முகம் மற்றும் மணிக்கட்டு வரை இரண்டு கைகளுமாகும்.
• ஒரு தடவைதான் மஸ்கு செய்ய வேண்டும்.
• நிய்யத்துடன் பிஸ்மில்லாஹ் சொல்லி ஆரம்பிக்க வேண்டும். (பிஸ்மில்லாஹ் சொல்வது வாஜிப் அல்ல)
• கைகளால் ஒரு முறைதான் மண்ணை தடவ வேண்டும்.
• கை, முகம் என்பதில் எதை முதலில் செய்தாலும் மார்க்க ரீதியாக பிழை கிடையாது.
வுழூவை முறிக்கும் காரியங்கள் அனைத்தும் தயம்மத்தையும் முறிக்கும்.

30 May 2021

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்) தொடர் : 01



 

துரருள் பஹிய்யா (அழகான முத்துக்கள்)

ஆசிரியர் : இமாம் ஷவ்கானி

மரணம் : ஹிஜ்ரி 1250

விரிவுரை : அஷ்ஷேய்க் முஜாஹித் இப்னு ரஸீன்

தொகுப்பு : எம்.கெ. யாஸிர்

தொடர் : 01

 

சுத்தம்

தண்ணீரின் வகைகள்

1. சுத்தமானது
2. சுத்தப்படுத்தக் கூடியது
தண்ணீர் எப்போது அசுத்தமாக மாறும்?
• இஸ்லாம் அசுத்தம் என்று சொல்லக்கூடிய ஒரு பொருள் கலந்து தண்ணீருடைய நிறத்தையோ, சுவையையோ, வாசத்தையோ மாற்றினால்..
• தண்ணீர் சுத்தப்படுத்தக் கூடியது என்பதிலிருந்து சுத்தமானதிற்கு மாறக் கூடியது.
உ+ம் : சுத்தமான மற்றும் சுத்தப்படுத்தக் கூடிய தண்ணீரில் சவர்காரமோ அது சார்ந்த ஏதாவது ஒரு பொருளோ கலந்து விட்டால் சுத்தப்படுத்தக் கூடியது என்பதிலிருந்து சுத்தமானதிற்கு மாத்திரம் மாறிவிடும். எனவே இந்த தண்ணீரில் வுழூ செய்ய முடியாது..
• இந்த சட்டத்திற்கு தண்ணீரின் அளவிலோ, ஓடக் கூடிய மற்றும் தேங்கி நிற்றல் அடிப்படையிலோ அல்லது பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத நிலையிலோ எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
 

நஜீஸ்

1. மனிதனுடைய மலம் சலம்
பால் குடிக்கக் கூடிய மற்றும் சாப்பிட முடியாத கைக் குழந்தைகளின் சிறுநீர் அசுத்தம் கிடையாது.
2. நாயுடைய எச்சில்
3. கழுதை, குதிரை, கோவேரிக் கழுதையின் விட்டை
4. மாதாவிடாய் இரத்தம்
5. பன்றி
இதுவல்லாத எல்லாவற்றிலும் கறுத்து முரண்பாடுகள் இருக்கின்றன.
• எல்லாவிடயங்கலிலும் அசல் சுத்தமானது. அசுத்தம் என்பதற்குதான் ஆதரபூர்வமான ஆதாரம் இருக்க வேண்டும். (ஹலால், ஹராம் விடயத்திலும் இதேதான்)
 

அசுத்தம் பட்டு விட்டால் எப்படி சுத்தப்படுத்துவது?

1 தண்ணீரால் கழுவுவதன் மூலம்
• பட்ட அசுத்தம் முழுமையாக நீங்கி விட வேண்டும்
• அசுத்தத்தின் காரணமாக இருந்த நிறம், சுவை, வாசம் நீங்க வேண்டும்.
2 செறுப்பில் பட்ட அசுத்தத்தை மண்ணில் தேய்ப்பதன் மூலம் சுத்தப்படுத்த முடியும்.
3 ஒன்றிலிந்து இன்னொன்றுக்கு மாறுதல்
• அசுத்தம் பட்ட பொருள் ஒன்று அதுவாகவே அதனுடைய நிறம், சுவை, வாசம் உட்பட அசுத்ததின் அடையாளம் முழுமையாக நீங்குதல்.
உ+ம் செத்த ஆடு சிறிது காலத்திற்கு பிறகு உப்பாக மாறுதல்
4 தண்ணீரை ஊற்றி அசுத்தம் அகளும் வரை கழுவுதல், தண்ணீரை இறைத்து சுத்தப்படுத்தல். அசுத்தத்தின் நிறம், சுவை, வாசம் அற்றுப் போகும் வரை..
5 சுத்தப்படுத்துவதில் அசல் தண்ணீர்தான். தண்ணீருடைய நிலைக்கு வேறொன்றும் சமனாகாது. சுத்தப்படுதுவதற்கு தண்ணீர் அல்லாத வேறொன்றுக்கு தெளிவான் ஆதாரம் இல்லாத வரையில்.
6 நாய் பாத்திரத்தினுல் வாய்விட்டுக் குடித்தால் ஏழு முறை அல்லது எட்டு முறை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். அதில் ஒரு முறை மண் போட்டு கழுவ வேண்டும். 
 

இயற்கைத் தேவையை பூர்த்தி செய்தல்

1. பூமியை நெருங்கும் வரை தன்னை மறைத்துக் கொள்ளல்.
2. மக்களை விட்டு தூரமாகுதல் அல்லது மறைக்கப்பட்ட இடத்தில் நிறைவேற்றல்.
3. பேச்சை விட்டு விடுதல்.
4. சங்கையான விடயங்களை தவிர்ந்து கொள்ளல்.
5. மார்க்கமோ சமூக வழமையோ ஒன்றை தடுத்து இருந்தால் அவ்விடத்தில் நிறைவேற்றக் கூடாது. மக்கள் இருக்கின்ற இடங்கள், மர நிழல், வீதிகள் போன்றவற்றில் இயற்கைத் தேவையை நிறைவேற்றக் கூடாது என்று மார்க்கம் சொல்கின்றது.
6. நிறைவேற்றும் போது கிப்லாவை முன்னோக்குதல் பின்னோக்குதல் கூடாது.
7. தண்ணீரால் சுத்தப்படுத்துதல் அல்லது கற்களைக் கொண்டு மூன்று முறை சுத்தப்படுத்துதல். கற்களுடைய நிலையில் எதுவெல்லாம் உள்ளனவோ அவற்றைக் கொண்டும் சுத்தப்படுத்தலாம்.
8. போகும் பொழுதும் வரும் பொழுதும் துஆவை ஓதிக் கொள்வது சுன்னா

23 May 2021

பொது எதிரி...

 

பொது எதிரியை எப்படி கைகோர்த்து வலிமையாக கையாள வேண்டும் என்பதை முஸ்லிம் சமூகம் இன்னும் உணரவில்லை. உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் சரி இதற்கு விதிவிலக்கில்லை என்று சொல்லுமளவிற்கு சிந்தனை வரட்சி பொதுமைப்பட்டிருக்கிறது என்பது கவலையளிக்கிறது.
ஆனால் எதிரிகள் பிரித்தாலும் கொள்கையை பக்காவாக பயன்படுத்தி எம் இதயங்களை கூறு போட்டு ஒற்றுமை எனும் பலத்தை சிதைத்து இருக்கின்றனர்.
ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் ஓர் உடலாக வர்ணித்தார்கள் நபி (ஸல்) அவர்கள். ஆனால் இன்று அந்த உடலை வைத்தே சமூகத் தலைமைகள், தத்தமது சுயநல உலகாதாயத்திற்காக கடித்துக் குதறி சின்னாபின்னமாக்கி விட்டிருக்கின்றனர். உள்வீட்டுச் சண்டைகளை காரணமாக கொண்டு பொது எதிரியை எதிர்கொள்வதிலும் வேறுபட்டு, சண்டையிட்டு, குரோதம் கொண்டு பிரிந்திருக்கிறோம்.
பலஸ்தீன பிரச்சினையில் சவூதிக்கும் துருக்கிக்கும் வக்காலத்து வாங்கும் சண்டையிலே எமது காலத்தை நாம் கழிக்கிறோம். அதே நேரம் அந்த நாட்டு தலைவர்களும் ஒரே அணியில் பொது எதிரியை எதிர்கொள்ளாமல் சகட்டுமேணிக்கு சில அரசியல், அதிகார வேறுபாடுகளை கொண்டு இரு துருவங்களாக வெறும் அறிக்கையில் தஞ்சம் அடைந்திருக்கிறார்களே தவிர ஆனது ஒன்றுமில்லை. இவ்விரண்டு சுன்னி முஸ்லிம் நாடுகளும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக எதிரியை எதிர்கொள்ளக் கூடாது என்பதில் எதிரி தெளிவாக இருக்கிறான். இதை முஸ்லிம் சமூகம் உணராமல் எதிரியின் எதிர்பார்ப்பிற்கு தோதுவாக கணகச்சிதமாக களப்பணி ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு பொய்யாகாது என்பதை மெய்ப்பித்திருப்பதைதான் இவைகள் எடுத்துக் காட்டுகின்றன. முஸ்லிம் சமூகம் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பார்கள் ஆனால் வெள்ளத்தில் அடிபட்ட சறுகுகள் போல் (ஒற்றுமை இழந்து) பலம் இழந்து இருப்பார்கள். அவர்களை நோக்கி எதிரிகள் பசித்த மிருகம் சாப்பாட்டுத் தட்டை நோக்கி பாய்ந்து வருவதை போல் வருவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்தார்கள். சமூகம் இதைதான் இன்று துல்லியமாக கண்டு கொண்டிருக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் சொன்ன மஹ்தி (அலை) அவர்களின் முன்னறிவிப்பை கொண்டே சமூகம் ஒற்றுமைப் படவிருக்கிறது. அந்த நேரத்தில் முஸ்லிம் சமூகம் முழுப்பலத்துடன் எதிரிகளை அடக்கி வெற்றிவாகை சூடும் என்பதில் சந்தேகம் இல்லை.
இன்ஷா அல்லாஹ்...

13 Feb 2021

ரஹ்மத்துல் ஆலமீன்

 

பிறர் நலம் பேணுவதில் நபியவர்களை மிஞ்சிய ஓர் மனிதப்புனிதரை இவ்வுலகில் சல்லாடை போட்டுத் தேடினாலும் யாருமே தேரமாட்டார்கள். மிதமிஞ்சிய குறுட்டுப் புகழ்சியால் உதிறும் வார்த்தைகளல்ல இவை. கீழ் வரும் ஹதீஸ் இதனை மெய்ச்சிலிர்க்க வைத்து நபியவர்களின் அப்பளுக்கற்ற வாழ்க்கையை பறைசாற்றுகிறது.
....மேலும், ஆயிஷா(ரலி) கூறினார். பிறகு இதயம் படபடத்தவர்களாக அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா(ரலி) விடம் நடந்த செய்தியைத் தெரிவித்துவிட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா(ரலி) அவர்கள் 'அவ்வாறு கூறாதீர்கள்; அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்; வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள்' என்றார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்களைத் தம் தந்தையின் உடன் பிறந்தவரான நவ்ஃபல் என்பவரின் மகன் 'வராக'விடம் அழைத்துச் சென்றார்கள்.
(ஸஹீஹுல் புகாரி: 3. ஹதீஸின் சுருக்கம்)
பலரும் தான் உழைத்ததில் ஒரு சில பகுதியைத்தான் வறியவருக்காக செலவு செய்வார்கள். ஆனால் வரியவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வேண்டியே வியர்வைச் சிந்தி உழைக்கும் மக்களை காண்பது அறிதிலும் அறிது. ஆனால் நபியவர்கள் பிறரின் கண்ணீரை துடைப்பதற்காக வேண்டியே தன்னுடைய இரத்தத்தை வியர்வையாக சிந்தியிருக்கிறார்கள் என்றால் இதன் பெருமானத்தை பொன்னெழுதுக்களால் வடித்தாலும் ஈடாகாது.
வரலாற்றில் மிகவும் செல்வாக்குப் பெற்ற நபர்களை ஆய்வுக்குட்படுத்தி தரப்படுத்தும் 'The 100' என்ற புத்தகத்தில் நபியவர்களை ஆய்வுக்குட்படுத்தியதில் அவரை முதல் நிலைப்படுத்தாமல் இருப்பதற்கு ஒருகாளும் ஓர் நல்ல மனச்சாட்சி இடம்தரமாட்டாது என்ற ஒரே காரணத்தினால்தான் புத்தக ஆசிரியர் ஒரு கிருஸ்தவராக இருந்தும், முதலாவதாக நபிகள் நாயகத்தை பட்டியல் இடுகிறார்.
நபி (ஸல்) அவர்களை நமது தலைவர் என்று நெஞ்சு நிமிர்த்து பெருமையாக சொல்வதாக இருந்தால் அவர் வாழ்ந்து காட்டிய வாழ்வியல் முறைமையை வாழ்வில் பின்பற்றாமல் இருப்பது தகுமா?