17 Aug 2021

மனித சிந்தனை..

சிந்திப்பது, கேள்வி கேட்பது, ஆராய்வது எல்லாம் மார்க்கம் வழியுறுத்திய சிறந்த நடைமுறைகள். ஆனால் எமது சிந்தனை ஆற்றளுக்கும் ஒரு எல்லைக் கோடு உண்டு. அந்த கோடுகள்தான் வஹீ எனும் இறைவனின் செய்திகள். 
 
அந்த எல்லைக் கோட்டைத் தாண்டி எமது சிந்தனைகளையும், கேள்விகளையும் நாம் விரிவு படுத்துவது எம்மை வழிகேட்டில் கொண்டு போய்ச் சேர்த்து விடும். 
 
'அல்லாஹ் அர்ஷின் மீது அமர்ந்தான்' என்றால் அதில் இரண்டு கருத்திற்கும், மாற்று கேள்விக்கும், வியாக்கியனப்படுத்துவதற்கும் இடமில்லை. 
 
உள்ளதை உள்ளது போன்று நம்பிக்கை கொள்வதே அஹ்லுஸ் ஸுன்னாக்களின் அகீதா. 
 
ஆனால் மாற்றுக் கொள்கை உடையோர் அதில் தங்களது சிந்தனையைப் பிரயோகித்து, கேள்விகளை அடுக்கி, 'அர்ஷின் மீது அமர்ந்தான்' என்றால், ஒன்றில் அர்ஷின் மீது அல்லாஹ்வுக்கு தேவை ஏற்படுவதாக இருக்கும் அல்லது அர்ஷ் அவனை விட சிறியதாகவோ பெரியதாகவோ இருக்கும். 
 
எனவே அதனுடைய விளக்கம் அல்லாஹ்வின் ஆட்சியைதான் குறிக்கும் என்று வஹீயை மீறிய சிந்தனையால் வழி தவறியுள்ளனர். 
 
அல்லாஹ்வின் சிருஷ்டிக்கும் ஆற்றலுடன் ஒப்பிடுகையில் எமது சிந்தனைகள் எல்லாம் தோற்றுப் போய் ஆச்சரிய விளிப்பில் போய் முடிந்து விடும். 
 
அந்தளவிற்கு நுண்ணறிவாளனும், பேறாற்றல் மிக்கவனுமாகிய, அந்த ரப்புல் ஆலமீனின் சொல் வாக்கை அப்படியே ஏற்று அதன் எல்லையில் இருந்து நம்பிக்கை கொள்வதுதான் ஒரு முஃமினின் பண்பாகும். 
 
மனிதனுக்கு சொற்பத்திலும் சொற்ப அறிவே வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்த வானம், பூமி, அண்ட சராசரங்களின் முடிச்சுக்களை அதன் படைப்பாளனைத் தவிர அவனுடைய படைப்பினங்களால் எப்படி அறிந்திட முடியும்?

 
சுபஹானல்லாஹ்!

 

No comments:

Post a Comment