7 Apr 2015

முகநூலில் முலாம் இடப்பட்டிருக்கும் தனிநபர் தாக்குதல்கள்..




முகநூலில் பரவலாக தனி நபர்களை நோக்கி மட்டுமே தமது விமர்சனங்களை குறிவைக்கும் கீழ்தரமான தஃவா முறையை இயக்க வேறுபாடின்றி அனைவருமே கையிலேந்திருக்கும் ஒரு துரதிஷ்ட நிலையையே காணக்கூடியதாக இருக்கின்றது. இவ்வாறு மாற்றுக் கருத்துடையவர்களை அவர்களின் சில சொந்த வாழ்க்கையை இழுத்து அவர்களின் தனிப்பட்ட குறைகளை அம்பலப்படுத்தும், இஸ்லாம் வெறுக்கின்ற செயற்பாட்டை செய்து வருகின்றனர். போதாக்குறையாக, இதை நியாயப்படுத்த தம்பக்கம் நியாயத்தையும் சுமந்து கொள்கின்றனர், அதாவது "நீங்கள் மட்டும் எல்லை மீறி நமது சொந்த விடயங்களை சந்திக்கு இழுப்பீர்கள்; நாங்கள் பதிலீடாக மட்டும் சொன்னால் அளவு கடந்த விமர்சனம் என்பீர்கள்" என்றொரு நீதி இல்லாத நியாத்தை சொல்கிறார்கள். ஆனால் இஸ்லாம் ஆகுமாக்காத ஒன்றை இவ்வாறு இன்னொருவர் செய்கிறார்கள் என்பதற்காக தாமும் அதை ஆகுமாக்கிக் கொள்வது அறியாமையின் உச்சகட்டமாகும்.