13 Mar 2014

இஸ்லாத்தில் இணங்களுக்கு இடையிலான நல்லிணக்கம்

நம் இலங்கைத் திருநாட்டில் கறை படிந்த வரலாறாக இரு இனங்களுக்கு இடையில் நடைபெற்ற 30 வருட கால  இமாலய யுத்தம், முற்றுப்பெற்று 5 வருடங்கள் பூர்த்தியாகி விட்டன.  அதன் சுதந்திரக் காற்றை மக்கள் சுவாசித்துக் கொண்டிருக்கும் நிலையிலேயே, யுத்த ரகணங்கள் ஆறுவதற்கு முன்னமே, மீளவும்  இன்னொரு சிறுபான்மை இனத்தை நோக்கிய சமிஞ்சைகள் ஒளிர்விட ஆறம்பித்திருக்கின்றன. 30 வருட கால யுத்தத்தின் பிறதான ஆறம்ப கர்த்தா, பெருபான்மை என்ற ஒரே காரணத்திற்காக சிறுபான்மைக்கு எதிராக சட்டத்தை கையில் எடுத்து அடக்குமுறைக்கு உள்ளாக்கியதே வரலாறு சொல்லும் சாட்சியாகும்.  அதே அணுகுமுறை இன்று சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராகவும் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கின்றது. இதன் பிண்ணனியில் செயற்படும் அரக்கர்களின் பிரதான நோக்கம், வரலாற்றில் தமிழினம் ஆயுதம் தூக்கியது போல் முஸ்லிம்களும் ஆயுதம் துக்க வேண்டும். ஆயுதத்தைக் கொண்டு நமக்கு எதிராக களம் காணுவார்களாயின், இதன் எதிரெலியாகவே அரச துணை கொண்டு அவர்களை ஒடுக்கி விடலாம் என்பதுவே அவர்களின் தாரகமந்திரம். இதனைத்தான் கடந்தகால யுத்தம் படம்பிடித்துக் காட்டுகின்றது.