இஸ்லாத்தின் இறுதித் தூதுத்துவப்பணி நிறைவுற்று 14 நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும் வல்லோன் அல்லாஹ்வால் அதன் அசல் இன்று வரைக்கும் எவ்வித கலங்கமும், மாறுதலும் இன்றி பாதுகாக்கப்பட்டுள்ளது. புனித உரைகளான அல்-குர்ஆன் மற்றும் ஆதரபூர்வமான ஹதீஸ்கள் மூலம் இவைகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன. இவ்விரண்டும்தான் அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்ட நேரான வழி. நேரான வழிக்குப் புரம்பாக எடுத்துவைக்கப்படும் ஒவ்வொரு எட்டுக்களும் புரக்கணித்து ஒதுக்கிவிடப்படவேண்டியவை. எனவேதான் நமது ஒவ்வொரு நடைமுறை சார் விடயங்களும் புனித உரைகளில் உரசிப்பார்த்தே நகர்தல், நகர்த்தப்படல் வேண்டும்.