23 Dec 2014

வாக்களிப்பை உதாசீனப்படுத்திவிடாதீர்கள்!



ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் கிட்டத்தட்ட இன்னும் இரண்டு வாரங்களே எஞ்சி இருக்கின்றன. கடந்த கால ஜனாதிபதித் தேர்தல்களை போன்றல்லாமல் இம்முறை முஸ்லிம்களுக்கு மிகவுமே சவால் மிக்க ஒரு தேர்தலாகவே  நோக்கப்படுகிறது. ஏனென்றால் முஸ்லிம்களின் கடந்த கால காயங்கள் இன்னும் ஆராவில்லை. ஆரும் படியாகவும் இருக்கவில்லை. எனவே இத்தேர்தல் முஸ்லிம்களை பொறுத்த வரையில் தமது கைக்கு வந்த கடிவாளம் போன்று ஒருகை பார்க்க இருக்கிறார்கள் என்பதையே உணர்த்தி நிற்கிறது.  இதனை வெறுமனே உதாசீனப் படுத்தி விட்டு கடிவாளம் கைமாறிப் போன பின் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் பண்ணி பயன் இல்லை.