7 May 2015

வெசாக் அன்னதான நிகழ்வுகளும் முஸ்லிம்களும்

உலகலாவிய பௌத்தர்கள் மே மாதம் பௌர்னமி தினத்தில் வெசாக் எனும் பண்டிகையை கொண்டாடுகின்றனர். பௌத்தர்களை பெருபான்மையாகக் கொண்ட இலங்கையிலும் வெசாக் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. புத்தரின் வரலாற்றைச் சித்தரிக்கின்ற வகையில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட  தோரணங்கள், வெசாக் கூடுகள், பிரித் வைபகங்கள், அன்னாதான நிகழ்வுகள் என பல்வேறு அம்சங்களின் தொகுப்புக்களால் வெசாக் பண்டிகை விழாக் கோளமிடுகிறது. குறிப்பாக அன்னதான நிகழ்வுகள் நாட்டின் நாலாபுரங்களிலும் மக்கள் அலை மோதுகின்ற அளவில்  நடைபெறுகிறது.
 
இவ்வன்னதான நிகழ்வுகளில் முஸ்லிம் பெயர் தாங்கிய அப்துல்லாக்களும், பாத்திமாக்களும் பங்குபற்றும் காட்சியே மிகப் பரிதாபகரமானது. அன்னாதானமாக பரிமாரப்படும் உணவுகளுக்காக ஆண்கள் பெண்கள் குழந்தைகள் சகஜம் மணிக்கணக்கில் காத்திருக்கும் அவலக் காட்சியை  ஊர்கள் பாரபட்ச்சமின்றி வருடம் தோறும் கண்களால் காணக்கிடைக்கிறது.