இனவாதம், மதவாதம் போன்ற சொற்கள் இலங்கைக்கு முற்றுப்பெறாத தொடர் கதையாகத்தான் தொடர்கின்றன. பல ஆண்டு இனவாத யுத்தம் முடிவுக்கு வந்த பிறகு சமாதானப் பூங்காவாக திகழவேண்டிய இலங்கை பூமி மீண்டுமொருமுறை பழைய நிகழ்வுகளை மீட்டிப்பார்க்க வேண்டிய ஒரு சந்தர்ப்பம் ஏற்படுமோ என்ற யதார்தமான கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது. அப்படி எழுவதற்கான ஆறம்ப இனவாத தாக்குதல்கள் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றமையை ஊடகங்கள் வாயிலாக பார்த்தும் கேட்டும் வருகிறோம். இனவாத காவிகள் அவர்களுடைய இனத்துவேச காய்களை மிக சாதூர்யமாக நகர்தி வருகின்றனர். நகர்வுகள் நாளுக்கு நாள் தீவரப்போக்கை அடைவதையும் கண்டு வருகிறோம்.