தலைப்பைப் பார்த்ததுமே அசந்து போய் ஏதோ வில்லங்கமா இருக்குமோ? என்று சந்தேகிக்க வேண்டாம். தப்லீக் சகோதரர்கள் சற்று உணர்ச்சிவசப்பட்டு தலைகால் புரியாமல் மனதிற்குள் திட்டித்தீர்த்துக்கொள்ள வேண்டாம். குறித்த தலைப்பில் இவ்வாக்கம் வரையப்படுவதின் பிரதான காரணம், எனது வாழ்வில் நிகழ்ந்த தப்லீக் கார்கூன் ஒருவரினூடான கசப்பான அலவலாவலின் உள்ளார்ந்த வெளிப்பாட்டின் பிண்னணி என்பதை, இவ்வாக்கத்தை ஆறம்பம் முதல் இறுதி வரை இதயசுத்தியுடன் வாசிப்பதினூடாக புரிந்து கொள்ள முடியும். எனவே தலைப்பின் பொருத்தப்பாடு தப்லீகின் அஸ்திவார காட்டுமானப் பணியின் வழுவற்ற, ஸ்திரமற்ற தன்மையே பளிச்சிடுகின்றது.